குடியால் தகராறு.. கணவனை கொன்ற மனைவி.. அம்பலமான நாடகம்..!
கோவை மாவட்டம் சவுரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகநாதன். இவர், தனது மனைவி பாக்கியம், இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். மதுப்பழக்கம் கொண்ட சண்முகநாதன், தினமும் மது அருந்திவிட்டு, தனது மனைவியிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில், சம்பவத்தன்றும், மது அருந்துவிட்டு, மனைவியை கடுமையாக அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்.
இதனால் கடும் ஆத்திரம் அடைந்த பாக்கியம், அவரது கணவர் தூங்கிக் கொண்டிருக்கும்போது, கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர், அவர் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறி, உறவினர்களிடம் நாடகம் ஆடியுள்ளார். ஆனால், சண்முகநாதனின் கழுத்தில் காயங்கள் இருப்பதால், சந்தேகம் அடைந்த உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், பாக்கியம் தான் கொலை செய்தார் என்பதும், பின்னர் நாடகமாடினார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
கணவர் தற்கொலை செய்து கொண்டாதாக கூறி மனைவி நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரப்பையும் ஏற்படுத்தியது.
-பவானி கார்த்திக்