இருளர் பழங்குடியினர் வசிப்பதற்காக ஊத்துக்காட்டில் ஒவ்வொரு குடியிருப்பும் தலா 4 லட்சத்தி 62,000 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. அதில் வாலாஜாபாத் ஊத்துக்காட்டில் தரமற்ற இருளர் குடியிருப்பு கட்டிய விவகாரத்தில் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் சாருலதாவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஊத்துக்காட்டில் 3.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக 76 இருளர் பழங்குடியினர் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. அந்த குடியிருப்புகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் எம்.ஆர்த்தி நேரில் ஆய்வு செய்தார். அந்த குடியிருப்புகள் தரமற்ற முறையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் ஒப்பந்ததாரர் பாபுவை நேரில் அழைத்து கண்டித்தார். இவ்வாறு பணிகளை மேற்கொண்டால் ஒப்பந்தத்தை ரத்து செய்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பிடித்து கொடுக்க நேரிடும் எனவும் ஆட்சியர் ஆர்த்தி ஒப்பந்ததாரரை எச்சரித்தார்.
இருளர் பழங்குடியினர் வசிப்பதற்காக ஊத்துக்காட்டில் ஒவ்வொரு குடியிருப்பும் தலா 4 லட்சத்தி 62,000 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. தரமற்ற முறையில் கட்டப்பட்டு வரும் இந்த கட்டடப்பணிகளை ரத்து செய்துவிட்டு மாற்று ஒப்பந்ததாரர் மூலம் பணிகளை மேற்கொள்ளுமாறு ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். இந்நிலையில், தரமற்ற குடியிருப்புகள் கட்டிய விவகாரத்தில் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் சாருலதா மற்றும் கள ஆய்வாளர் சுந்தரவனம் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Discussion about this post