சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரை செல்ல தொடக்கம்…
மயிலாடுதுறையில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரை செல்ல தொடங்கினர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து ஆண்டுதோறும் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் மாலை அணிந்து பாதயாத்திரையாக செல்வது வழக்கம்.
அதன்படி ஸ்ரீ சமயபுரம் பாதயாத்திரை குழுவினர் சார்பில் 24 ஆம் ஆண்டாக பக்தர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர்.
முன்னதாக மயிலாடுதுறை காவரி துலா கட்டம் அருகில் உள்ள ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் ஒன்றிணைந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
அதனை தொடர்ந்து விரதம் இருந்த 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரை புறப்பாடு சென்றனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.