சமயபுரம் மாரியம்மன் கோவில் அலைமோதும் பக்தர்கள்..!!
திருச்சி சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு கூட்டம் கூட்டமாக வருவார்கள்.
முக்கியமாக வெள்ளி, செவ்வாய், ஞாயிறு மற்றும் அமாவாசை, பெளர்ணமி போன்ற தினங்களில் சென்று வழிபட்டால் இன்னும் சிறந்த பலன் கொடுக்கும்
ஆடி மாதம் என்றாலே அம்மன்களுக்கு மிகவும் விசேஷமான மாதம் சமயபுரம் மாரியம்மன் கோவிலிலும் சரி சில குறிப்பிட்ட தினங்களுக்கு சென்று வழிபடுவது உண்டு அந்த வகையில் நேற்று ஆடி 3வது வெள்ளி என்பதால் தமிழகம் எங்கும் இருந்து வந்து மாரியம்மனை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரம் கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து சென்றதால்.., நாளை விடுமுறை நாள் இன்னும் பக்தர்கள் கூட்டம் அதிகாமாக இருக்கும் என்பதால் பக்தர்களின் பாதுகாப்பிற்காக போலீஸ் பாதுகாப்பு போடபட்டுள்ளது.
நேற்று மாரியம்மன் கோவிலில் திருவிழா என்பதால் பல பக்தர்கள் கரும்பு தொட்டில்.., நெருப்பு சட்டி ஏந்தி வந்து நேர்த்தி கடன் செலுத்தியுள்ளனர். ஒரு சில பக்தர்கள் முடி காணிக்கை செய்து உள்ளனர். முக்கியமாக அதிகமாக நோய் வய பட்டவர்கள் இத் திருத்தலத்திற்கு சென்று நெய் தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டால் நோய்கள் குணமாகி விடும் என்பது ஐதீகம்.
நாளை கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதால் பக்தர்கள் பயமின்று சுவாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..