தீபம் எப்படி ஏற்றனும் தெரியுமா???
தாமரை நூல் திரி கொண்டு தீபம் ஏற்றுவது நமது வீட்டில் இருக்கும் வாஸ்து பிரச்சனைகளை சரி செய்யும்.
குழந்தைகள் கொடுக்கும் தொல்லைகள் குறையும்.
பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.
முதலில் கிழக்கு நோக்கி ஒரு திரியும், இரண்டாவது வடக்கு நோக்கி ஒரு திரியும், 3வது மேற்கு நோக்கி இரண்டு திரியும் ஏற்ற வேண்டும்.“தெற்கு நோக்கி தீபம் ஏற்றக்கூடாது”
தீபத்தை குளிர்விக்கும்போது, முதலில் மேற்கே உள்ள திரியையும், இரண்டாவது வடக்கே உள்ள திரியையும், 3வது கிழக்கே உள்ள திரியையும் குளிர்விக்க வேண்டும்.
“ஊதி அணைக்க கூடாது”
மேற்குறிப்பிட்டபடி, 8 நாட்களுக்கு அன்றாடம் 1 மணி நேரம் வீதம் பசுநெய் கொண்டு தாமரை நூல் திரியில் தீபம் ஏற்றுவது நமது வீட்டில் உள்ள வாஸ்து பிரச்சனைகளை சரி செய்யும்.
“”குத்துவிளக்காகிய குடும்பப்பெண்””
குத்துவிளக்கின் 5 முகங்களிலும் தீப ஒளி பிரகாசித்து எரிவது போல, குடும்ப குலவிளக்காகத் திகழும் குடும்பப் பெண்ணும் அன்பு, மனஉறுதி, நிதானம், சமயோசிதபுத்தி, சகிப்புத்தன்மை என்னும் 5 குணங்களுடனும் சிறப்பாகப் பிரகாசிக்க வேண்டும் என்பதை நோக்கமாக வைத்து, திருமணம் ஆகி மறுவீடு வந்ததும் மணப்பெண்ணை முதலில் குத்துவிளக்கு ஏற்றச் சொல்வது நடைமுறையில் வழக்கமாக உள்ளது.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)