பஹால்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் போர் மூண்டுள்ளது. பாகிஸ்தானில் பலூசிஸ்தான் விடுதலைப்படையினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதனால், பாகிஸ்தான் இரு தலைகொள்ளியாக தவிக்கிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தளபதி சிறை பிடிக்கப்பட்ட ரகசிய இடத்தில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, ஜெனரல் ஷாகீர் ஷாம்ஷத் மிஷ்ரா பாகிஸ்தான் ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. ஆனால், பரவலாக சோசியல் மீடியாவில் தகவல்கள் பரவி வருதுகிறது. முன்னதாக, முன்னதாக பஹால்காம் தாக்கதலையடுத்து , தனது குடும்பத்தினரை வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டதாகவும் தகவல் வெளியானது. அதேபோல, போர் சூடுபிடித்ததும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 3 அமைச்சர்களும் வெளிநாட்டுக்கு தப்பி விட்டதாக தெரிகிறது.