மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வு..! 9050 மருத்துவ இடங்கள்..! அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேட்டி..!
தமிழ்நாட்டில் 2024 -25 ஆண்டுக்கான இளநிலை மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 21 தேதி நடைபெறும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜெயிக்கா கட்டிடத்தின் கட்டுமான பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை :
அப்போது செய்தியாளர் களை சந்தித்து பேசிய அவர்., கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பொறுத்த வரை வடசென்னை மக்கள் பயன்படுத்தும் முக்கிய மருத்துவமனையாக உள்ளது. எனவே கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக 358 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2,68, 615 சதுர அடியில் ஆறு தளங்களுடன் கூடிய 12 அறுவை சிகிச்சை அறை., கூட்டு அருவை அறை., புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய ஹைபிரிட் அறுவை அறை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் இந்த கட்டிடத்தில் 441 படுக்கை அறைகள் அமைக்கப்பட உள்ளது.
இளநிலை மருத்துவர்களுக்கான கலந்தாய்வு :
2024 – 25ம் ஆண்டிற்கான இளநிலை எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் பட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கைகான விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது. இன்று முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இளநிலை மருத்துவ மாணவர்களுக்கான அகில இந்திய கலந்தாய்வு ஆகஸ்ட் 14ம் தேதி நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான கலந்தாய்வு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 14ம் தேதி தொடங்கவுள்ளது. அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 21ம் தேதி முதல் தமிழகத்தில் மருத்துவ தேர்வு மூலமாக முதற்கட்ட கலந்தாய்வு தொடங்கவுள்ளது.
அதற்கான முதற்கட்ட கலந்தாவிற்கான தரவரிசை பட்டியல் 19 தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட கலந்தாய்வு தொடங்கிய முதல் 7.5% சிறப்பு இட ஒதுக்கீடு தொடர்பான விவரம் அரசு பள்ளி மாணவர்கள், விளையாட்டு மாணவர்கள். மாற்றுத்திறனாளி மாணவர்கள் முன்னாள் ராணுவத்திற்கான ஒதுக்கீடு 22ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்துள்ளது.
அதைத் தொடர்ந்து ஏழு புள்ளி ஐந்து சதவீதம் சிறப்பு இட ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ஒதுக்கீடு முன்னாள் ராணுவத்திற்கான ஒதுக்கீடு விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீடு தொடர்பான கலந்தாய்வு 22ம் தேதியும் 23ம் தேதியும் 12 நடைபெறும் எனவும்..
அதேபோல் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5050 இடங்கள். ஒரு இஎஸ்ஐ மருத்துவ கல்லூரியில் 150 இடங்களும், 21 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 3400 இடங்களும் மூன்று மாநில தனியார் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகளில் 450 இடங்கள் என தமிழ்நாட்டில் மொத்தம் 9050 மருத்துவ இடங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் பிடிஎஸ் பல் மருத்துவ படிப்பில் மூன்று அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் 250 இடங்களும் 20 தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் 1950 இடங்களும் ஆக மொத்தம் 2200 இடங்கள் உள்ளன. இவற்றுள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு எம் பி பி எஸ் படிப்பில் 851 இடங்களும் வீடியோஸ் படிப்பில் 38 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிய இடங்கள் சேர்க்கை எதுவும் இல்லை ஆறு புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த ஆண்டு இளநிலை மருத்துவ மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கவுள்ளதாக அவர் கூறினார்.
மேலும் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் மீட்க தமிழகத்திலிருந்து மருத்துவக்குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..