சசிகலா செய்த சதி..!! எடப்பாடியும், அண்ணாமலையும் கொடுத்த அல்வா..!!
அதிமுகவை ஒன்றிணைப்போம் என சொன்ன சசிகலாவிற்கு ஒரு மடங்கு வெற்றி கூட கிடைக்கவில்லை, சிறையிலிருந்து வெளியே வந்ததில் இருந்தா பாஜகவும் அதிமுகவும் அவரை கண்டுகொள்ளாமலே இருந்துள்ளது. இந்நிலையில், அதிமுகாவாவது தன்னை எப்படியாவது சேர்த்து கொள்ளும் என காத்து கொண்டிருந்த சசிகலாவுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது.
எடப்பாடி பழனிசாமியை டம்மியாக நினைத்த சசிகலா அதிமுகாவிடம் பேசுவது எல்லாம் வேஸ்ட் என சொல்லி, பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேசியுள்ளார். அதற்கு முன் கடந்த 2 வருடங்களாக ரஜினிகாந்த், விஜயசாந்தி,போன்ற பிரபலங்களை வைத்து, தூது விட்டுள்ளார். ஆனால் அதிலும் அவருக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது.
இந்நிலையில் தமிழகத்தில் தேர்தல் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில் தென்மண்டலத்தில், போட்டியிட்டு ஜெயிக்க வேண்டும் என நினைத்த சசிகலா பாஜகவிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்., இந்நிலையில் பாஜக சசிகலாவின் தயவை நாடி வருவது குறிப்பிடத்தக்கது.
அதன் அடிப்படையில் சசிகலா, எடப்பாடி பழனிசாமி போட்டியிடட்டும் ஆனால், அதற்கு பதிலாக, எடப்பாடியுடன் சேர்ந்து, பிபி-பார்மில் கையெழுத்திடும் அதிகாரம் தனக்கு கொடுக்க வேண்டும் என்றும் பாஜகவில் முக்கிய பொறுப்பு வேண்டும் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கோரிக்கையை பாஜக, எடப்பாடியிடம் தெரிவித்ததற்கு அவர் மறுத்துள்ளார். அதற்கான முக்கிய காரணம், B-பார்மில் யார் கையெழுத்திடுகிறார்களோ அவர்கள் தான், வேட்பாளர்களாக தேர்வு செய்யப்படுவார்கள். எனவே, இந்த விஷயத்தில் தேவையில்லாத சிக்கல் வரும் என்பதால் இதனை எடப்பாடி பழனிசாமி நிராகரித்துள்ளார்.., இதனால் சசிகலாவிற்கு ஏமாற்றத்திற்கு மேல் ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது.
இதில் ஆத்திரமடைந்த சசிகலா வெளியே சொல்லி கொள்ளாமல், தன்னுடைய ஆதரவாளர்கள் 2 பேருக்கு சீட் கொடுத்தால்.., பாஜக கூட்டணிக்கு முக்குலத்தோர் வாக்குகளை பெற்றுத்தருவதாகவும், இன்னும் சில கட்சிகளிடம் பேசி கூட்டணியில் இழுத்துகொள்ளலாம் எனவும் சசிகலா ஆசை காட்டியுள்ளார்.
ஆனால், அதற்கு பாஜக தரப்பில், முக்குலத்தோர் வாக்குகளை பெறுவதற்கு தினகரன், ஓபிஎஸ் மட்டுமே போதும் எங்களுக்கு அந்த வாக்கு தேவையில்லை எனவும்.., உங்களுடன் கூட்டணி வைத்து கொள்ள முடியாது என்றும் பாஜக பதிலடி கொடுத்துள்ளதால் அதிலும் சசிகலாவுக்கு ஏமாற்றம் கிடைத்துள்ளது.
இப்போது சசிகலா என்ன செய்து கொண்டிருக்கிறார்..? அதிமுகவில் அவரது ரோல் என்ன..? அடுத்த அவரின் பிளான் என்ன..? என எதுவுமே நமக்கு தெரியாது. ஆனால், “நாடாளுமன்ற தேர்தலில் தீவிர அரசியல் பணிகளை முன்னெடுப்பேன், அதிமுகவை மீட்டு ஜெயலலிதாவின் ஆசையை நிறைவேற்றுவேன் என சசிகலா சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
இதில் வேடிக்கை என்ன வென்றால் சசிகலா, எந்த தொகுதியிலும் நேரடியாக போட்டியிடவில்லை, பாஜகவும், அதிமுகவும் நிராகரித்து விட்ட நிலையில் எப்படி ஜெயிப்போம் என அவர் சொல்கிறார் என பலரும் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
வருகின்ற தேர்தலில் பாஜக தன்னை ஒரு ஆயுதமாக பயன்படுத்திக் கொள்கிறது.
குறிப்பாக, பாஜக தலைமையின் உத்தரவின் பேரில் அண்ணாமலை தன்னை சசிகலாவையும் கூட்டணியில் சேர்த்துக்கொள்வார் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தினகரன் மட்டுமே சசிகலா போதும் என சொன்னதால் பாஜக சசிகலாவை நிராகரித்து விட்டதாக சொல்லப்படுகிறது.
இதனால் சசிகலாவின் ஆதரவாளர்களின் எண்ணிக்கையும், குறைந்துள்ளது. தன்னை ஒதுக்கியவர்களே தன்னை தேடி வந்து கூட்டணி வைத்துக்கொள்ள சொல்லி கெஞ்சுவார்கள் அதற்காக நான், தினகரனை தேர்தல் களத்தில் இறக்கியுள்ளேன் என சசிகலா கூறியுள்ளார். அது மட்டும் இல்லாமல் சிலருக்கு இந்த தேர்தல் ஒரு பாடமாக அமையும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தினகரன் கூறுகையில், சித்தி அமைதியாக ரெஸ்ட் எடுக்கட்டும், இந்த எலெக்சன் வேலையெல்லாம் நாங்க பார்த்து கொள்கிறோம். தினகரனும் ஒதுக்கிவிட்ட நிலையில், சசிகலாவின் அரசியல் கேள்விக்குறியாகி உள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..