காமெடி நடிகர் சேஷு மரணம்…!! கடைசியா அவர் பேசுனது இதுதான்.. ஜீவா உருக்க பதிவு..!!
காமெடி ஷோ லொள்ளு சபா மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து அதன்மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனவர் நடிகர் சேஷு. கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த நடிகர் சேஷு சிகிச்சைக்கு 10 லட்சம் ரூபாய் தேவைப்பட்ட நிலையில் பணம் திரட்ட செலுத்தி சிகிச்சை அளிக்க முடியாமல் போனதால் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார். நடிகர் சேஷுவிற்கு வயது 60 என்பது குறிப்பிட தக்கது.
லட்சுமி நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட சேஷுவிற்கு மூன்று மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்ட ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்கக்ப்பட்டுள்ளார். அவரது சிகிச்சைக்காக 10 லட்சம் ரூபாய் தேவைப்பட்டதால் லொல்லு சபா நண்பர்கள் பணம் திரட்டும் செயலில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று மாலை சேஷு உயிரிழந்தார்.
சேஷு நல்ல நடிகரும் நண்பரும் மட்டுமல்ல சிறந்த சமூக சேவகரும் கூட சமூக தொண்டுகளில் தன்னை அர்ப்பணித்து கொண்டவர், கொரோனா காலத்தில் தான் சம்பாதித்த பணத்தில் ஏழை மக்களுக்கு உணவளித்தவர் சேஷு என ஜீவா தெரிவித்துள்ளார். அவர்கள் குடும்பத்தினருக்கு இது மிகப்பெரிய இழப்பு என்றும் ஜீவா தெரிவித்துள்ளார்.
அவருடன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நான் பழகியுள்ளேன் இவரின் மரணம் லொள்ளு சபா நண்பர்களுக்கு மிகப்பெரிய இழப்பு என வருத்தம் தெரிவித்துள்ளார்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு யூடியூப் சேனலுக்காக ரீ யூனியன் ஷோ ஒன்றை சேஷு ஏற்பாடு செய்தார் கடைசியாக தான் பழகிய அனைத்து நண்பர்களும் இதில் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அவர் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததே அவரை நாங்கள் கடைசியாக பார்ப்பதற்காக தானோ என நான் நினைக்கிறன்.
நாங்கள் எந்த ஊருக்கு சென்றாலும் சேஷு பற்றி விசாரிப்பார்கள். அந்த அளவிற்கு அவருக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளார்கள். இந்த நேரத்தில் அவரை பிரிந்து வாழும் அவரது குடும்பத்தினருக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கல்களையும், அவர்கள் அதில் இருந்து மீண்டு வர இறைவனை வேண்டிகொள்வதாக அவர் கூறினார்.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..