20 பெண்களுடன் உல்லாசமாக இருந்த கல்லூரி ரோமியோ..! விசாரணையில் வெளிவந்த பல திடுக்கிடும் தகவல்..!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வாத்தியார்விளை பகுதியை சேர்ந்த ஸ்ரீ கந்தன் என்பவரது மகன் ஸ்ரீ தர்சன் (வயது 22). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்ஏ ஆங்கில இலக்கியம் 2ம் ஆண்டு படித்து வருகிறார். நாகர்கோவில் இருந்து வெளிமாவட்டத்திற்கு வந்து படிப்பதால் கோவை பி.கே. புதூர் பகுதியில்.., ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் கல்லூரியில் படித்து வந்த 19 வயது மாணவியுடன் நட்பாக பழகியுள்ளார் நாளடைவில் அது காதலாக மாறி அந்த மாணவியை தான் தங்கியிருந்த வீட்டிற்கு அடிக்கடி அழைத்து வந்துள்ளார்.

அந்த மாணவியுடன் ஸ்ரீ தர்சன் அடிக்கடி பாலியல் ரீதியான உறவில் இருந்துள்ளார். அந்த மாணவியை தொடர்ந்து 21 வயதான இன்னொரு கல்லூரி மாணவியுடன் நெருங்கி பழகி., ஸ்ரீ தர்சன் அவரையும் பாலியல் ரீதியான் உறவில் இருந்துள்ளார்.
இந்த 2 மாணவிகள் மட்டுமின்றி மற்றொரு மாணவியையும் காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார். அந்த மாணவியை பாலியல் உறவிற்கு வற்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது . ஆனால் அந்த மாணவி, யாருமில்லாத இடத்திற்கு தனியாக வர மாட்டேன் என கூறியுள்ளார். ஆனால் அவரை விடாமல் ஸ்ரீ தர்சன் வற்புறுத்தி வந்துள்ளார்.
இதனால் அவனை காதலித்த மற்ற 2 மாணவிகளுக்கும் இந்த விவகரம் தெரியவந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து ஸ்ரீ தர்சனிடம் இருந்து விலகியுள்ளனர்.., இருப்பினும் விடாத ஸ்ரீ தர்சன் மாணவிகளை வழியில் மிரட்டி மீண்டும் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார்.., அதற்கு மறுத்தால் என்னுடன் இருந்த போட்டோ மற்றும் வீடியோவை எல்லோருக்கும் அனுப்பி விடுவேன் என மிரட்டியுள்ளான்.
இந்த விவகாரம் கல்லூரியில் பரவ பாதிக்கப்பட்ட மாணவிகள் 2பேரும் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன் பெயரில் போலீசார் ஸ்ரீ தர்சனை நேற்று முன்தினம் கைது செய்து பிஎன்எஸ் சட்ட பிரிவு 75, 79, 296 பி, 351 (2) பாலியல் துன்புறுத்தல், தகாத முறையில் பேசுதல், மிரட்டுதல், வன்முறை மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன் கொடுமை உட்பட மேற்கண்ட சட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.., அப்போதே பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
ஸ்ரீ தர்சன் தங்கியிருந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது அங்கு காண்டம் பாக்கெட்டுகள் ஏராளமாக கிடந்துள்ளது. படத்தில் வருவது போல இவர் காதலிப்பதாக நடித்து 20 மாணவிகளை தன் வீட்டிற்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக தெரிகிறது.
போலீசார் ஸ்ரீ தர்சனின் செல்போனில் மாணவிகளை போட்டோ, வீடியோ எடுத்து வைத்திருக்கிறாரா..? என ஆய்வு செய்தனர். அப்போது ஏகப்பட்ட போட்டோ, வீடியோக்கள் அதில் இருப்பது தெரியவந்தது. இந்த போட்டோக்களை யாருக்காவது அனுப்பியிருக்கிறாரா..? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மாணவிகள், இளம்பெண்கள் தவிர ஆண்கள் யாரையும் ஸ்ரீதர்சன் தன் வீட்டிற்கு அழைத்து வந்ததில்லை என்பதும் விசாரணையில் வெளிவந்தது. தன் வீட்டின் அருகே யாருமில்லை என உறுதி செய்த பின்னர் மாணவிகளை செல்போனில் அழைத்து வரவழைத்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இவரின் காதல் வலையில் விழுந்த சில மாணவிகள் தங்களது எதிர்காலம் பாழாகி விடும் என்ற அச்சத்தில் விவரங்களை வெளியே சொல்லாமல் மறைத்துவிட்டதாக கூறப்படுகிறது. மாணவிகள் மட்டுமின்றி ஸ்ரீ தர்சன் வசித்து வந்த ஏரியா பகுதியை சேர்ந்த வேறு சில பெண்களும் இவரின் காதல் லீலையில் சிக்கியிருக்கலாம் என தெரிகிறது.
இவரின் செல்போன் பதிவு, ஏமாந்த மாணவிகளின் விவரங்களை அறிந்த போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கல்லூரி மாணவிகள் காதல் போர்வையில் ஏமாற்றும் நபர்களிடம் மிகுந்த உஷாராக இருக்க வேண்டும் என அவரகள் எச்சரித்துள்ளனர். கோவையில் கல்லூரி மாணவர் நடத்திய இந்த பாலியல் லீலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.