பாஜக லிங்க் க்ளிக் பண்ணா பணமா..? இது புதுசா இருக்கே..!!
தமிழ்நாட்டில் தேர்தல் களம் எந்த அளவிற்கு சூடு பிடித்துள்ளதோ அதே அளவிற்கு அரசியல் கட்சி தலைவர்களின் பிரச்சாரமும் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில்
நெல்லையில் லோக்சபா தொகுதியை பொறுத்தவரை திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராபர்ட் புரூஸ், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், அதிமுக சார்பில் ஜான்சி ராணி ஆகியோர் வேட்பாளர்களாக களத்தில் இறங்கியுள்ளனர்.
நெல்லை தொகுதியில் வெல்லப்போவது யார் என்ற பெரும் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதே சமயம் நெல்லை தொகுதியில் பணப் பட்டு வாடா வேகமாக நடைபெற்று வருகிறது.. அதற்காக நயினார் நாகேந்திரனும் சில நாட்களுக்கு முன் இந்த சிக்கலில் பிடிபட்டார்.
மேலும் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்ப்படுவதாகவும் மக்கள் புகார் அளித்துள்ளனர்.., ஆனால் இவற்றில் எதிலும் சிக்க கூடாது என நினைத்த பாஜக ஒரு புது முயற்சியை எடுத்துதுள்ளது அதாவது “நூதன முறையில் பண பரிமாற்றம்“..
அதாவது செல்போன் ஆப் மூலம் 1500 ரூபாய் தருவதாகச் சொல்லி பாஜக மோசடி வேலை செய்து வருவதாக கூறி நெல்லை மாவட்ட திமுக நிர்வாகிகள் தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர்.
செல்போன் ஆப் ஒன்றில் லிங்க் அழுத்தினால் 1500 ரூபாய் தருவதாகக் கூறி செல்போன் மூலம் நூதன முறையில் மக்களை பாஜகவினர் ஏமாற்றுவதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் திமுக நிர்வாகிகள் தற்போது புகார் அளித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து நம் மதிமுகம் செய்தியாளர்களைச் சந்தித்து அவர்கள் கூரியதாவது.., “செல்போனில் ஆப் ஒன்றை இன்ஸ்டால் செய்து உள்ளே சென்றால் வாக்காளர் அடையாள எண் ஒன்றை கேட்கிறது.., அதை கொடுத்தவுடன்.., வங்கி ஆவணம் கேட்கிறது அதையும் கொடுத்து ஓகே செய்தால், நாம் கொடுத்திற்கும் வங்கி கணக்கிற்கு பணம் வந்து சேருமாறு செட் செய்துள்ளனர்.
இப்போ கொடுக்கப்படும் 1500 நாளைக்கு பல லட்சமாக கொள்ளையடிக்கபடும் மக்கள் சூதனமாக இருக்க வேண்டும் என திமுக நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர்.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..