உறிகட்டி சித்தரின் 117 ஆம் ஆண்டு குருபூஜை வழிபாடு…
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உறிகட்டி சித்தரின் 117 ஆம் ஆண்டு குருபூஜை வழிபாடு நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சேத்திரப்பாலபுரம் பகுதியில் உறிக்கட்டி சித்தரின் 117 ஆம் ஆண்டு குருபூஜை ஆராதனை நடைபெற்றது.
இதனை முன்னிட்டு மகா ருத்ர யாகம், அபிஷேகத்தை தொடர்ந்து, பக்தர்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வந்திருந்த சாதுக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.
அந்த அன்னதானத்தில் சாது சாப்பிடும் உணவில் மடிப் பிச்சை ஏந்தி உணவு சாப்பிடும் தம்பதிகளுக்கு, குழந்தை வரம் கிடைக்கும் என்பதால் ஏராளமான குழந்தை இல்லா தம்பதிகள் மடிப் பிச்சை ஏந்தி உணவு வாங்கி உண்டு வினோத வழிபாடு நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.