கர்நாடக அரசுக்கு உத்தரவிட ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..!!
காவிரி நீர் உரிமையை காப்பதில் திமுக அரசு எப்போது உறுதியாக இருக்கும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் தனி தீர்மானம் கொண்டு வந்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காவிரி விவகாரத்தில் செயற்கையான நெருக்கடியை கர்நாடக அரசு உருவாக்கியுள்ளதாக கூறினார்.
உழவர்கள் பருவத்தே பயிர் செய்ய ஏதுவாக முறையாக மேட்டூர் அணையை கடந்த ஜூன் 12ஆம் தேதி திறந்து வைத்ததாக குறிப்பிட்ட முதலமைச்சர், நீதிமன்ற உத்தரவையும் கர்நாடக அரசு பின்பற்றவில்லை என கூறினார்.
கர்நாடகாவில் உள்ள நான்கு அணைகளிலும் நீர் வரத்து போதுமானதாக இருந்த போதிலும் நீர் திறக்கவில்ல என குறிப்பிட்ட அவர், 9 புள்ளி 19 டிஎம்சி தண்ணீர் கிடைக்க வேண்டிய நிலையில் 2புள்ளி 28 டிஎம்சி மட்டுமே கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு மேற்கொண்ட தொடர் முயற்சிகளை எடுத்து ஜூலை 21ம் தேதி கபினி அணைகளில் இருந்து அடுத்த ஆறு நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடக மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டதாக குறிப்பிட்ட முதலமைச்சர், சட்ட வல்லுநர்களுக்கு ஆலோசித்து நீரை பெறுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என உறுதியளித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..