முத்துமாரியம்மன் கோவிலில் தேரோட்டம்; உற்சாகத்தில் பக்தர்கள்.
சிறுபாக்கம் அடுத்த மாங்குளம் ஊராட்சியில் புகழ் பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. ஏப்ரல் 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவிழா, இதனை தொடர்ந்து தினமும் ஒரு சிறப்பு பூஜையும் நடைபெற்றது.
மே 14ம் தேதி காலை அபிஷேகமும் சிறப்பு தீப ஆராதனையும் நடந்துள்ளது. இதனை தொடர்ந்து தேர் ஊர்வலமும், அன்று இரவு தீமிதி திருவிழாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
தீமிதியில் கலந்துக்கொண்ட பக்தர்கள் 48 நாட்கள் விரதம் இருந்து, தீ மிதித்துள்ளனர். தீ மிதியில் இறங்கிய அனைவரின் மீதும் சுவாமி ஆடியுள்ளனர்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி