திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் லேசான நில நடுக்கம் ஏற்பட்ட சம்பவம்…
திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் லேசான நில நடுக்கம் ஏற்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் பள்ளிகொண்டா, குடியாத்தம், பேர்ணாம்பட்டு போன்ற இடங்களிலும் மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளிலும் காலை லேசான நில அதிர்வு ஏற்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், நிலநடுக்கம் உணரப்பட்ட பகுதியில் மத்திய புவியியல் துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து பேசிய மாவட்ட ஆட்சியர், 3.1 ரிக்டர் என்ற அளவில் இந்த லேசான நில அதிர்வு காணப்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)