கோவையில் தொடரும் செல்போன் பறிமுதல்..! ஸ்மார்டாக செயல்பட்ட காவல் ஆணையர்..!
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் பால கிருஷ்ணன் தொலைந்து போன செல்போன்களை அதன் உரிமையாளரிடம் வழங்கினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கடந்த ஒரு வருட காலமாக கோவை மாநகர காவல் துறை சார்பாக மூன்று முறை தொலைந்து போன செல்போன்கள் மற்றும் பறித்துச் சென்ற செல்போன்கள் கண்டுபிடித்து அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளோம்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட செல்போன்கள் ஒப்படைக்கபட்டு உள்ளது. மேலும் சில மாதங்களுக்கு முன்பு திருட்டு போன செல்போன்கள் காவல் துறையில் வழக்குபதிவு செய்து 250 செல்போன்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.
தொலைந்து போன செல்போன்கள் தொழில் நுட்பம் மூலமாக இந்த செல்போன்கள் எங்கு உள்ளது. என கண்டுபிடிக்கப்பட்டு செல்போன் வைத்திருந்தவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கேரளா பெங்களூர் மாநிலங்களிலிருந்தும் இந்த செல்போன்கள் வாங்கப்பட்டுள்ளது கடந்த ஒரு வருடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவிநாசி சாலையில் நான்கு சக்கர வாகனத்திற்கு பின்புறம் வந்த மர்ம நபர்கள் உங்களது வண்டி சக்கரம் ஆடுகிறது என வழிப்பறி குறித்த கேள்விக்கு புகார் வந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..