காவிரி நீர் திறப்பு விவகாரம்..!! தொடரும் விவாதம் தீர்வு கிடைக்குமா..?
காவிரி நீர் திறப்பு விவகாரம் தொடர்பாக காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் வரும் 30-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 13 ஆம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் காவிரியில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் தண்ணீரை அக்டோபர் 16 முதல் 31 வரையில் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து வரும் அக்டோபர் 30ம் தேதி 89வது காவிரி ஒழுங்கற்று குழு கூட்டம் நடைபெற உள்ளது. காணொளி மூலம் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநில அதிகாரிகள் கலந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆலோசனை கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் கூறியது போல வினாடிக்கு 3 ஆயிரம் கன அடிநீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டதா , கர்நாடக நீர் நிலைகளில் உள்ள நீர் இருப்பு நிலவரம், தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரின் அளவு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது..