நகராட்சி வருவாய் அலுவலர் பிரேம்குமார் தலைமையில் சில அலுவலர்கள் வாடகை நிலுவையில் உள்ள கடைகளை சீல் வைத்ததாக கூறப்படுகிறது. கடந்த மாதம் வரை வாடகை செலுத்தியுள்ளதாகவும், இந்த மாதம் செலுத்த கால அவகாசம் உள்ளதாக கூறி சில வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமின்றி, வருவாய் ஆய்வாளர் பிரேம்குமாரை முற்றுக்கையிட்டு அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் கடைகளுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோரி வியாபாரிகள் சந்தை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையெடுத்து நகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி கடையில் இருந்த சீலை அகற்றினர். இதனை தொடர்ந்து கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் நகராட்சி தினசரி சந்தை சீரமைப்பு தொடர்பாக அனைவரிடம் கருத்துக்கேட்க வேண்டும் என்று கையெழுத்து இயக்கம் நடத்தினர். இந்நிலையில் நகராட்சி வருவாய் ஆய்வாளரை பணி செய்யவிடமால் தடுத்து நிறுத்தி, தரக்குறைவாக பேசியதாக நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், சின்னமாடசாமி, குமார். செல்வம், சுரேஸ், தமிழரசன், பாலமுருகன் உள்ளிட்ட 6 பேர் மீது காவல்துறையினர் 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.