இன்று மாலை முதல் பேருந்துகள் இயங்காது..!! பயணிகள் நிலை என்ன..? இந்த திடீர் நிறுத்தம் ஏன்..?
இன்று மாலை முதல் ஆமினி பேருந்துகள் இயக்கப்படாது என தென்மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு தகவல் வெளியிட்ட நிலையில் இன்று காலை தமிழக அரசு அவரச ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு கொடுத்துள்ளது..
ஆயுதபூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு பலரும் சொந்த ஊர் செல்ல முடிவெடுத்திருந்த நிலையில்.., ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் விலை மூன்று மடங்கு அதிகமாக ஏற்றப்பட்டதால் பலரும் சிரமத்திற்கு ஆளாகினர்..
600 ரூபாய் பயணசீட்டின் விலை 1200 ரூபாய்க்கும்.., 1000 ரூபாய் டிக்கெட்டின் விலை 2000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.., இதனால் பல பயணிகள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் திகைத்துள்ளனர்..,
இதில் சில பயணிகள் நடத்துனர்கள் சொன்ன விலைக்கு டிக்கெட் எடுத்து சென்றுள்ளனர்.., ஒரு சில பயணிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து.., ஆம்னி பஸ் நிறுவனத்தின் மீது புகார் அளித்துள்ளனர்..
அவர்கள் அளித்த புகாரின் பெயரில்.., 119 ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.., மேலும் 2092 ஆம்னி பேருந்துகளுக்கு 37 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை ஆறு மணி முதல் பேருந்துகள் இயங்காது என அறிவித்துள்ளனர்..,
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் புக்கிங் செய்திருந்தநிலையில் மாலையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது..,
விடுமுறை நாளில் பேருந்துகளுக்கு அதிக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டதால் 120 ஆம்னி பேருந்துகள் சிறை பிடித்துள்ளனர்..
ஆம்னி இருந்துகளை சிறை பிடித்தால் பேருந்துகள் இயங்காது ஒரு லட்சத்திற்கு மேலாக பயணிகள் இன்று பயணம் செய்ய முன்பதிவு செய்துதுள்ளார்கள். ஆனால் அவர்களை போக்குவரத்துதுறை சார்பாக வழியில் இறக்கிவிடுவதை தவிர்க்கும் பொருட்டு அனைத்து சங்கங்களும் இணைந்து வேறு வழியில்லாமல் இந்த முடிவை கனத்த இதயத்துடன் அறிவிக்கிறோம்” என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்..
இதனை கண்டித்தும் மக்களின் நலனை கருத்தில் கொண்டும் தமிழக அரசு ஆம்னி பேருந்து உரிமையாளர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்திவருகிறது.. இந்த பேச்சு வார்த்தை காலை 10:30 மணி முதல் நடைபெற்று வருவதால் சரியான முடிவு இன்னும் சில மணி நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது…
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..