குழந்தைக்கு உரம் விழுதலை பற்றி பார்ப்போம்..!! அறிகுறி மற்றும் தீர்வு…!
பச்சிளம் குழந்தைகளுக்கு கழுத்தின் தசையில் கட்டி உண்டாகும். இந்தக் கட்டி வருவதால் பச்சிளம் குழந்தைகளுக்கு சதை ஒரு பக்கமாக அழுத்திக் கொண்டிருக்கும். இதனால் குழந்தைகளுக்கு தலை ஒரு பக்கமாக, தாடை மற்றொரு பக்கமாகவும் திரும்பிக் கொள்கிறது. அதன் காரணமாக இவர்களுக்கு ‘உரம் விழுதல்’ பிரச்சனை ஏற்படுகிறது. வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாகவும் இவர்களுக்கு உரம் விழலாம்.
இந்தப் பிரச்சனை பச்சிளம் குழந்தை முதல் 12 வயது வரை உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் வரும். தேர்ச்சி பெற்ற மருத்துவரிடம் ஸ்ட்ரெச்சிங் செய்து இதனை சரிசெய்யலாம். ஆனால் இதனை குழந்தைகளால் தாங்கிக் கொள்ள முடியாது. வலி அதிகமாக காணப்படும் இதனால் குழந்தை அழுதுக்கொண்டே இருக்கும்.
உரம் விழுந்திருப்பதை கண்டுபிடிக்க சில அறிகுறிகள் இருக்கிறது, குறிப்பாக, உரம் விழுந்திருக்கும் குழந்தைக்கு தாடை ஒரு பக்கமாகவும் தலை இன்னொரு பக்கமாகவும் சாய்ந்து இருக்கும்.
இரு கண்களாலும் ஒரே திசையில் நேராக பார்க்க முடியாது. உடல் வளர்ச்சி குறையும்.
உடனடியாக பிசியோதெரபிஸ்ட்டிடம் குழந்தையை கொண்டு சென்று பிரச்சனையை சொல்லி முறையான சிகிச்சை அளிக்க வேண்டும்.
மருத்துவரிடம் சென்றும் உரம் விழுதல் குழந்தைகளுக்கு குணமாகவில்லை என்றால் குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை மருத்துவரிடம் குழந்தையை கொண்டு சென்று மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும்.
வீட்டிலே “சுளுக்கு எடுப்பது மற்றும் ஒத்தடம் கொடுப்பது” போன்றவற்றைத் செய்ய கூடாது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.