நீலி கண்ணீர் வடிக்கும் மோடி..!! தமிழகம் முழுவதும் ஸ்டாலின் குரல்..!! வடமாநிலத்தில் இப்போ..? செல்வபெருந்தகை பேட்டி..!!
சென்னை தியாகராய நகரில் உள்ள (பாலன் இல்லம்) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிதுள்ளார்.
அப்பொழுது அவர் பேசுகையில் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவுடைய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலாக கருதப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் இந்தியா அரசியல் சட்டம் மிகப்பெரிய அளவில் இழப்பை கொடுத்துள்ளது. அந்த அரசியல் சட்டத்தை வீசி எறிய வேண்டும் மாற்று அரசு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று, பாஜகவுடன் இணைந்த ஆர்எஸ்எஸ் கூட்டத்தினர் பகிரங்கமாக கூறுகின்றனர்.
இந்தியா பற்றிய அரசியல் சட்டம் மற்றப்பட வேண்டும் என்று பல இயக்கங்கள் ஆர் எஸ் எஸ் அமைப்புகள் குரல் கொடுக்கும் பொழுது நரேந்திர மௌனமாக இருப்பது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய நாடு ஜனநாயக்க குடியரசாக இருக்க வேண்டும், இந்தியா ஒரு மதவாத நாடக மாறிவிடக்கூடாது, இன்றைக்கு இந்திய நாடு ஒரு பேரிடராக மாறி இருப்பதாக அவர் கருத்து கூறியுள்ளார்.
மோடி இல்லை என்றால் இந்தியா இல்லை என்று கூச்சல் போடும் நிலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவை காப்பாற்ற பாசத்தை விரடிட சர்வாதிகாரத்தை விரடிட ஸ்டாலின் அழைக்கிறேன் என்று கூறியிருக்கிறார், இந்திய கூட்டணி மாபெரும் வெற்றி அடைய வேண்டும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்
இந்தியா முழுவதும் பாஜக-க்கு எதிராக குடியரசு எழுந்துள்ளது மோடியின் பொய் புரட்டுக்கு எதிராக ஒரு எழுச்சி எழுந்திருக்கிறது, 400ரு தொகுதிகளில் மக்களுடைய வெற்றி பெறும் என்று கூறி வருகிறார்கள்,
உபியை தவிர வேறு எங்கும் இவர்கள் வென்றிட முடியாது. அப்படி இருந்தாலும் இவர்கள் வாய் சவடலு விட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள். மோடி தமிழகத்தில் எத்தனை தடவை கால் வைத்தாலும் அவர்கள் இங்கு கால் பண்ற முடியாது. வட மாநிலங்களே அவருடைய பெயருக்கு நிலைமை குலைந்து வருகிறது,
மதச்சார்பற்ற அரசியல் ஆட்சி, இந்திய அரசியல் சட்டம் செல்கின்ற சுதந்திரம் சகோதரத்துவம், சமூக நீதி அரசியல் நீதி ஆகவே எடுத்துச் செல்கிற ஒரு மாற்று ஆட்சி இன்று அமைய இருக்கிறது,
தமிழ்நாட்டில் திமுக தலைமையில் அமைந்திருக்கிற அணி வெற்றி பெறுவது யாரும் தடுத்துவிட முடியாது, அதேபோல் அகில இந்திய அளவில் இந்திய கூட்டணி இன்றைக்கே வெற்றி பெறுகிறார் அரசியல் சூழல் உருவாகிறது என்று திட்டவட்டமாக கூறுகிறேன்,
இதன் காரணமாகவே மோடி அவர்களுக்கு கோபம் ஏற்படுகிறது. நிதானத்தை இழக்கிறார் கண்டதை எல்லாம் பேசுகிறார், பிரதமர் என்று அடிப்படையில் மக்களின் பிரச்சினைகளை தேர்தல் களத்தில் தீர்க்க விரும்பவில்லை,
அவர் கொடுக்கிறது எல்லாம் மோடி கேரண்டி , ஆனால் இவர் ஆட்சிக்கு வந்த பின்னர் ஏழைகள் மிக கடினமாக உழைத்து முன்னேற்றம் இல்லாமல் உள்ளார்கள் ஆனால் கார்ப்பரேட் நிறுவனத்தினர் மிகப் பெரிய அளவில் வளர்ந்து இருக்கிறார்கள்,
இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவேன் என்று கூறுகிறார் பத்தாண்டுகளாக பல கோடி பேருக்கு வேலை வழங்கிருக்க வேண்டும் எங்கே வேலை, கருப்பு பணம் கையம் படுத்தப்படும் ஒரு குடிமகன் கணக்கில் 15 லட்சம் வைக்கப்படும் என்றார் எங்கே அந்த பணம் இதை தொகுதியில் மோடி பேச தயாரா..?
விவசாயிகளின் கோரிக்கைகளை செயல்படுத்தாத ஏற்றுக்கொள்ளாத மோடி தற்போது அவர்களின் கோரிக்கைகளுக்கு பொது வெளியில் விளக்க தயாரா..?
இடதுசாரி சித்தாந்தம் பாதிக்கிறது என்று மோடி பேசி வருகிறார். ஆனால் பொது வெளியில் மோடி பேச தயாரா சான்னாதானம் என்றால் என்ன என்று விளக்க தயாரா, ஆகவே இன்றைக்கு மோடி மத ரீதியாக ஜாதி ரீதியாக மக்களை பிளவுபடுத்துகிறார்.
மேற்கு தெற்கு, வடக்கு தெற்கு, என்று நாட்டையே பிளவுபடுத்துவது என்று மோடி செயல்படுகிறார்.
இந்திய நாடு ஒரு ஜனநாயக நாடா என்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது, மாநில அரசு உரிமைகளை அதிகாரங்களை ஒன்றும் பின் ஒன்றாக இன்றைக்கு அபகரித்துக் கொண்டு வருகிறார், ஆளுநர்களை பாஜகவின் ஏஜெண்டுகளாக செயல்பட்டு வருகின்றனர்,
ஆகவே ஒன்றிய அரசு சர்வாதிகார அரசாங்கம் அது ஒன்றிய அரசாக இருக்க முடியாது, மாநில அரசு உதாசீனப்படுத்தி கல்வியை மதவாத கொள்கையாக மாற்றுவதற்காக தான் கல்விக் கொள்கையை கொண்டு படிக்கிறது,
புயல் வெள்ளத்தால் தமிழகம் பாதிக்கப்பட்டு இருக்கும் பொழுது ஏன் வரவில்லை கோ ஆப்பரேட்டிவ் ஃபெடரிலேஷன் இருந்திருந்தால் அவர் ஏன் வரவில்லை, மக்களை ஏமாற்றி நாட்டு நலனில் அக்கறை இல்லாத ஒரு ஆட்சி மோடி ஆட்சி,
சுதந்திர காலத்தில் அவர்களுடைய பங்கேற்பு எதுவுமில்லை ஆனால் இன்றைக்கு 2047 பற்றி பேசுகின்றார். இந்தியா கூட்டணி சார்பாக நாடு முழுவதும் மக்களுக்கு ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளது, ஆகவே பாஜகானினர் மிரண்டு போயிருக்கிறார்கள்,
இந்தியா ஒரு மதச்சார்பற்ற கூட்டாட்சி விதிமுறைகளை கடைப்பிடிக்கின்ற ஒரு நாடாய் சமூகநீதியை குறித்து படிக்கின்ற ஒரு நாடாய் நமது நாடு மாறவேண்டும் ஆனால் பிஜேபி அதிகாரத்தில் இருந்து தூக்கி ஏறிய பட வேண்டும்..
தேர்தல் ஆணையமே சார்பு நிலை இல்லாமல் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்படாமல் செயல்பட வேண்டும்.
தேர்தல் நடத்தை விதிமுறை என்பது அனைத்து கட்சிகளையும் ஒரே மாதிரியாக நடத்த வேண்டும், ஆனால் ஒரு கட்சி சார்பாக தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் நடந்து கொள்கிறது,
தேர்தல் ஆணையர் இங்கு நடக்கின்றது விதி மீறல்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும், தேர்தல் ஆணையம் பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக இல்லாமல் நியாயமாக நேர்மையாக இந்த தேர்தலை நடத்த வேண்டும்,
இன்றைக்கு இந்தியாவில் ஒழுக்கமற்ற ஊழல் முறையில் செயல்படும் ஒரே கட்சி அது பாரதிய ஜனதா கட்சி தான், காங்கிரசின் கணக்கு முடக்கியது தேர்தல் கள வேலை நடந்து கொண்டிருக்கும்போது இந்த செயலை கண்டிக்கின்றோம்.
அமலாக்கத்துறை வருமானவரித்துறை சிபிஐ ஆகிய இந்த துறைகளை மத்திய அரசு வைத்து தவறாக பயன்படுத்துகிறது. பெட்ரோல் டீசல் விலையை தேர்தல் வரும் நேரத்தில் விலையை குறைக்கிறேன் என்று மோடி நீலி கண்ணீர் வடிக்கிறார்.
கேரளாவில் இருக்கும் அரசியல் சூழ்நிலை வேறு மற்றும் மாநிலங்கள் இருக்கும் அரசியல் சூழ்நிலை வேறு கேரளாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவது அந்த மாநிலத்தில் அரசியல் சூழ்நிலைதான் அங்கு பாஜகவால் காலூன்ற முடியாது .
வடமாநிலங்களில் காங்கிரஸ் வலுவாக இருக்கிறது என்று கூறும்போது வயநாட்டில் ஏன் ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என்ற கேள்விக்கு அவர்கள் மூன்று தொகுதியை தேர்வு செய்து உள்ளார்கள் எங்கு வேண்டுமானால் போட்டியிடுவார்கள் என மழுப்பலான பதிலை அளித்துள்ளார்.
பல்வேறு வாக்குறுதிகள் அளித்தாலும் பொது வாக்குறுதியாக கூட்டாட்சி தத்துவ முறை,மதச்சார்பின்மை , அரசியலமைப்புச் சட்டத்தினை காப்பாற்றுதல் போன்ற வாக்குறுதிகளை மட்டுமே கூட்டணி ஆட்சியில் நிறைவேற்ற முடியும் பின்பு என்னென்ன வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியும் என்று பரிசீலனை செய்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..