கர்நாடகா தேர்தல் தோல்வி பிரச்சனை இல்லை, இன்று இல்லையென்றால் நாளை வெல்வோம் என நடிகை நமீதா தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு பாஜக சார்பில் “பாஜக குடும்ப பிரிமியர் லீக் கிரிக்கெட் விளையாட்டு போட்டி” மதுக்கரை பகுதியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டியை நடிகையும், பாஜக பிரமுகருமான நமிதா கிரிக்கெட் விளையாடி தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறும் போது: பாஜக மட்டும் தான் கட்சி உறுப்பினர்களை ஒருங்கிணைக்க இம்மாதிரியான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மைசூர் சிங்கம் அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் பாஜக கட்சி நன்கு முன்னேறி வருகிறது.
மேலும் அதன் காரணமாக தான் எங்கு சென்றாலும் பாஜக பெயர் ஒலிக்கிறது. கர்நாடகா தேர்தல் தோல்விக்கு காரணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பாஜக தலைவர் அண்ணாமலையின் கவனம் தமிழகத்தின் மீது இருக்கலாம், அவர் தனது பணியை சிறப்பாக செய்வார்.
என் தலைவரைப் பற்றி இவ்வாறு இப்படி பேசுவது கஷ்டமாக இருப்பதாக கூறிய நமீதா, கர்நாடகா தோல்வி பெரிய பிரச்சனை இல்லை, அடுத்த முறை வெற்றி பெறலாம். மேலும் பாஜக தலைவர் அண்ணாமலை, பாரத பிரதமர் மோடி ஆகியோர் மீது அனைவருக்கும் நம்பிக்கை உள்ளது. எனவே இன்று வெற்றிபெறவில்லை என்றால் நாளை வெற்றி பெற்று விடலாம் என தெரிவித்தார்.
Discussion about this post