செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை சின்னதம்பி, வசந்தா, வென்னியப்பன், சந்திரா மற்றும் மாரியப்பன் ஆகிய 5-பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் கவலைக்கிடமான நிலையில் மதுராந்தகம் அடுத்த பேரம்பாக்கம் மற்றும் பெருங்கரணை ஆகிய பகுதியை சேர்ந்த அஞ்சலை, தம்பு, சங்கர், அமாவாசை, முத்து ஆகிய 5-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு சார்பில் 10-லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி உள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்து வருகிறார்.