சஷ்டிவிரதம் அன்று முருகனை வழிபட்டால் கிடைக்கும் பலன்..!!
இந்த வினையாக இருந்தாலும் கந்தன் அருள் இருந்தால்.., வந்த வினையெல்லாம் விலகி விடும் என்று சொல்லுவார்கள். முருகருக்கு பல விரதங்கள் இருந்தாலும் முக்கியமானதாக சொல்லப்படுவது கந்த சஷ்டிவிரதம் தான்.
கந்தசஷ்டி விரதத்தை பல முனிவர்களும், தேவர்களும் இருந்த விரதம், சுப்பிரமணியருடைய மாலா மந்திரத்தில், சஷ்டி ப்ரியாய மந்திரம் இடம்பெரும். சஷ்டி என்பது திதி விருப்பமுள்ளவன் என்றும், சஷ்டி தேவியை விரும்புபவன் என்றும் பெயர்.
சஷ்டி விரதம் இருப்பது எப்படி என்று பார்க்கலாம்:
சஷ்டி நாளில் காலை முதல் மாலை வரை அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்து, காலை மாலை கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும். காலை, மாலை வீட்டில் விளக்கு ஏற்றி தீப ஆராதனை செய்ய வேண்டும்.
முருகர் கோவிலுக்கு சென்று வழிபடுவது இன்னும் சிறந்தது.., ஒவ்வொரு சஷ்டி அன்றும் இந்த விரதத்தை கடைபிடிக்கலாம், சஷ்டி விரதம் இருக்கும்
பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.
குழந்தை இல்லாத தம்பதிகள் இருவரும் சேர்ந்து, விரதம் இருந்தால் விரைவில் திருமணம் ஆகும்.
சஷ்டிவிரதம் இருக்கும் பக்தர்களுக்கு, முருகர் என்றும் துணை நிற்பார்.