பெண்கள் ஆக்சஸரீஸ் (accessories) அணிவதால் ஏற்படும் பயன்கள்..!!
பெண்களின் அழகை இன்னும் அழகாக காட்டுவதற்காக.., சில accessories அணிவது வழக்கம் ஆனால் அதில் சில பயன்களும் அடங்கியுள்ளது. accessories அணிவதன் பயன் பற்றி உங்களுக்காக..
பொட்டு : நெற்றிக்கு நடுவே வைக்கப்படும் பொட்டு ஒரு பெண்ணின் அழகை எடுத்து காட்டுவதற்கு மட்டுமல்ல.., பெண்ணின் முகத்தை பார்த்து பேசும் பொழுது மாற்றவர்களின் பார்வை.
அவளின் முகத்தை பார்த்து பேசும்படி இருக்கும். எனவே தவறான பார்வையை தடுக்க உதவுகிறது.
கம்மல் : கம்மல் அணியும் இடத்தில் இருக்கும் நரம்பானது மூளையுடன் இணைந்து இருக்கும்.
எனவே மூளையின் செயல் திறனை அதிகரிக்க உதவுகிறது. ஜிமிக்கி கம்மல் பெண்களுக்கு இன்னும் அழகை கூட்டிவிடும்.
நெற்றிச்சுட்டி : நெற்றியின் மேல் வைக்கும் நெற்றிச்சுட்டி ஆனது.., தலைவலி மற்றும் சைன்ஸ் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
நெக்லஸ் : கழுத்தில் இடப்படும் செயின், நெக்லஸ் மற்றும் ஆரமானது மற்றவர்களின் பார்வையை ஈர்க்கும் விதத்தில் இருந்தாலும். உடலுக்கும் தலைக்கும் இடையே இருக்கும் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
வளையல் : வளையல் அணிவது ஹார்மோன் சுரப்பி உற்பத்தியை அதிகரிக்கிறது. முக்கியமாக.. கர்ப்பமான பெண்கள் வளையல் அணிவது ஹார்மோன் சுரப்பி உற்பத்தியை ரெகுலேட் செய்து.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. இது தாய்க்கும் சேய்க்கும் நலம் அளிக்கிறது.
ஒட்டியாணம் : இடுப்பு பகுதியில் அணியும் ஒட்டியாணம் ஆனது.., வயிற்று பகுதியை அழுவுற செய்கிறது.
மூக்குத்தி : மூக்கில் உள்ள சில புள்ளிகளுக்கு பெருங்குடல் மற்றும் சிருங்குடல் இணைந்து இருக்கும். அந்த புள்ளியை தொடும் பொழுது.., இது சம்மந்தமான நோய்களை சரி செய்துவிடலாம். மூக்குத்தி அணிந்து இருக்கும் பெண்கள் மாதவிடாய் சரியாக.., வருவதை உணரலாம்.
கொலுசு : கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம், பித்தப்பை மற்றும் வயிறு போன்ற உறுப்புகளின் செயல் திறனை தூண்டுவதற்கு கொலுசு உதவுகிறது.
மெட்டி : மெட்டி அணிவதால் பெண்களின் கர்ப்பப்பை வலுவுற செய்யும். எனவே தான் திருமணமான பெண்களை மெட்டி அணிய சொல்கின்றார்கள்.
மேலும் இதுபோன்ற பல பெண்கள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி.
Discussion about this post