பஞ்சகவ்ய விளக்கு ஏற்றுவதால் கிடைக்கும் பலன்..!!
வீட்டில் அகல் விளக்கு, வெள்ளி விளக்கு, காமாட்சி அம்மன் விளக்கு, மற்றும் குத்து விளக்கு போன்ற விளக்குகளை ஏற்றி வழிபாடு செய்வார்கள்..,
இவற்றை பூஜையறையில் வைத்து நாம் தினமும் காலை, மற்றும் மாலை வேளையில் ஏற்றுவதால் இறைவன் அருள் கிடைப்பதோடு வீட்டிற்கு சுபிட்சத்தைத் கொடுக்கும் மேலும் வீட்டில் கெட்ட சக்திகளை விரட்டி, பாசிட்டிவ் எனர்ஜியை கொடுக்கும்.
![](https://static.langimg.com/photo/imgsize-951664,msid-94355538/tamil-samayam.jpg)
அது மட்டும் இல்லாமல் அனைத்து செல்வச் செழிப்பையும் கொண்டு வந்து சேர்க்கும். பஞ்சகவ்யம் என்பது பசுவிலிருந்து எடுக்கப்படும் ஐந்து வகை பொருட்களாகும். பால், நெய், தயிர், கோமியம், சாணம் ஆகியவற்றை சரியான விகிதத்தில் சேர்த்து அத்துடன் இன்னும் சில மூலிகை பொருட்களை சேர்த்து ஏற்றப்படுவதே பஞ்சகவ்ய விளக்கு என அழைப்பார்கள்.
இந்த விளக்கை நாம் வீட்டில் ஏற்றி வைத்து வழிபட்டால் யாகம் செய்ததற்கு சமம் என சொல்லப்படுகிறது. மேலும் பஞ்சகவ்ய விளக்கை வீட்டில் ஏற்றி வைப்பதனால் மகாலக்ஷ்மியின் அருளையும், செல்வ செழிப்பையும், நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், மன நிம்மதியையும் கொடுக்கும்.
இந்த விளக்கை நாம் ஏற்றி வழிபட்டால் செய்த பாவங்கள் அனைத்தையும் நீங்கி சிறந்த வல்லமையை கொடுக்கும் என சொல்லப்படுகிறது.
இது 100 சதவீதம் உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு. வீட்டில் மன நிம்மதியை கொடுக்கும், இந்த பஞ்சகவ்ய விளக்கை 10 முதல்15 நிமிடங்கள் ஏற்றி வைத்து பின் அதனுடைய சாம்பலை விபூதியாக பயன்படுத்தினால் நன்மை கிடைக்கும்.
முதலில் இந்த விளக்கை எடுத்து நீரில் 10 விநாடிகள் நனைத்து பின் விளக்கில் பஞ்சகவ்யம் சேர்த்து தாம்பூலம் தட்டின் மீது வைத்து ஏற்ற வேண்டும். முக்கியமாக செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் காலை மற்றும் மாலை 6 மணிக்கு மேல் ஏற்றினால் இன்னும் சிறந்த பலன்கள் கிடைக்கும்..
இதனால் ஏற்படும் புகை வீடு முழுவதும் பரவி, நல்ல நறுமணத்தை தருவதோடு வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகளை விரட்டி அடிக்கும்..
நாம் தெய்வமாக வழிபடும் பசுவிடம் இருந்து எடுக்கப்படும் இந்த ஐந்து வகையான பொருட்கள் நல்ல பலனை தரும் என்பது ஐதீக உண்மை..
இந்த விளக்கை தொடர்ந்து 48 நாட்கள் வீட்டில் ஏற்றி வந்தால், கடன் பிரச்னை தீரும் என்பது உண்மை..
மேலும் குடும்பம் ஒற்றுமையாக இருக்கும், கண் திருஷ்டி விலகி விடும்.
இந்த வகை விளக்குகள் நாட்டு மருந்து கடைகளில் மட்டுமே கிடைக்கும்..
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..