ஆம்பூரில் கஞ்சா மற்றும் போதை சாக்லேட் வைத்திருந்த பெங்களூர் இளைஞர் கைது..!!
ஆம்பூரில் கஞ்சா மற்றும் போதை சாக்லேட் வைத்திருந்த பெங்களூர் இளைஞர் கைது அவரிடமிருந்த ஒரு கிலோ கஞ்சா மற்றும் போதை சாக்லேட்டுகள் பறிமுதல் செய்து மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் நடவடிக்கை
ஒடிசா மாநிலத்தில் இருந்து ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்த இளைஞர் ஒருவர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ரயிலில் வந்து கொண்டிருந்தபோது, ரயிலில் டிக்கெட் பரிசோதகர் வருவதை அறிந்து உடனடியாக ஆம்பூர் ரயில் நிலையத்தில் இறங்கி ரயில் நிலைய வாயிலில் வெளியே உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நின்றுள்ளார்.
இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வாணியம்பாடி மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி தலைமையிலான மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் தற்காலிக பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது ரயில் நிலைய வாயிலில் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகிக்கும் வகையில் பையுடன் நின்றிருந்த இளைஞர் ஒருவரை பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனை மேகொண்டதில் பையில் கஞ்சா மற்றும் போதை சாக்லேட்டுகள் இருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அந்த இளைஞரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் பெங்களூரு பகுதியைச் சேர்ந்த அணில் குமார் என்பதும் ஒடிசா மாநிலத்தில் இருந்து 1கிலோ கஞ்சா மற்றும் 350 கிராம் போதை சாக்லேட்டுகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது.,
இதனைத் தொடர்ந்து வாணியம்பாடி மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறையினர் கஞ்சா கடத்தி வந்த அணில் குமாரை கைது செய்து, அவர் கடத்தி வந்த ஒரு கிலோ கஞ்சா மற்றும் 350 கிராம் மதிப்பிலான போதை சாக்லேட்டு களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.