ஹரியானா கேடரில் பிரபலமான மற்றும் நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரியாக கருதப்படும் ஏப்ரல் 30ம் தேதி ஓய்வு பெற்றார்.
கடந்த 1991-ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான அசோக் கெம்பா தனது 34 ஆண்டு காலப் பணியில் 57 முறை இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனாலும், ஊழலுக்கு எதிராக தனது போராட்டத்தை ஒரு போதும் அவர் மாற்றிக் கொள்ளவில்லை. கடைசியாக போக்குவரத்துத் துறையில் கூடுதல் தலைமைச் செயலாளராக அவர் பணியாற்றி வந்தார்.இந்த பதவியில் 2024 டிசம்பரில் நியமிக்கப்பட்டார்.
2012-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமாக குருகிராமில் உள்ள ஒரு சர்ச்சைக்குரிய நில ஒப்பந்த பரிமாற்றத்தை ரத்து செய்தபோது அசோக் கெம்காவின் பெயர் தலைப்பு செய்தியானது. பா.ஜ.க. அரசோ, காங்கிரஸோ அசோக் கெம்காவை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவரை 6 மாதத்துக்கு ஒரு முறை தூக்கி அடித்துக் கொண்டே இருந்தன.
ஹரியானாவில் பா.ஜ.க. ஆட்சியில், கடந்த 12 ஆண்டுகளாக கெம்காவுக்கு பலமுறை ஆவணக் காப்பகத் துறை . தொல்லியல் துறை போன்ற முக்கியத்துவம் குறைந்த துறைகளே தரப்பட்டது. ஆனாலும்,எந்த துறையில் இருந்தாலும் சிறந்த முறையில் பணியாற்றுவார். . நான்கு முறை இந்தத் துறைக்கு அனுப்பப்பட்டபோதும், அவர் ஒருபோதும் புகார் சொன்னதில்லை. எந்த துறைக்கு தூக்கி அடிக்கப்பட்டாலும் அவருடன் கூடவே நேர்மையும் பயணிக்கும் என்பதுதான் நிலைப்பாடு.
கடந்த 2023-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் மனோகர் லால் கட்டாருக்கு அசோக் கெம்பா ஒரு கடிதம் எழுதினார். அதில், விஜிலென்ஸ் துறையின் தலைவர் பொறுப்பை தனக்கு தரும்படி கேட்டிருந்தார். ஊழலுக்கு எதிரான உண்மையான போர் நடத்தப்படும் என்றும், எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்றும் அந்த கடிதத்தில் கூறியிருந்தார். ஆனால்,மனோகர் லால் கட்டார் அந்த கடிதத்தை குப்பையில் போட்டிருப்பார் என்று நாம் நம்புவோம்.
அசோக் கெம்பாவுக்கு ஒரு முறை கூட அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதில்லை. ஆனாலும், சலித்துக் கொண்டதில்லை. ஒரு முறை பதவி உயர்வு பெற்ற தனது சகாக்களுக்கு அசோக் கெம்பா இப்படி வாழ்த்து சொன்னார். மத்திய அரசு துறைகளின் செயலாளர்களாக பதவி உயர்வு பெற்ற எனது பேட்ச்மேட்களுக்கு வாழ்த்துக்கள். வளைந்து கொடுக்காத நேரான மரங்கள்தான் முதலில் வெட்டப்படுகின்றன. இதற்காக, வருத்தப்படவில்லை. புதுப்பிக்கப்பட்ட புது தெம்புடன் நான் வளருவேன் . தொடர்ந்து இயங்குவேன் என்று பதிவிட்டிருந்தார்.
கொல்கத்தாவில் 1965ம் ஆண்டு பிறந்த அசோக் கெம்கா, கடந்த 1988-ம் ஆண்டு ஐ.ஐ.டி. கரக்பூரில் கணினி அறிவியலில் பி.டெக் பட்டமும் எம்.பி.ஏவும் படித்தவர். சட்டம், நிர்வாகம் மற்றும் நிதியியலிலும் தேர்ச்சி பெற்றவர்.