வலிப்பு நோய் வந்த குழந்தைக்கு.. மருத்துவர் இப்படி பண்ணலாமா…?
மயிலாடுதுறையில் வலிப்பு நோய் வந்த குழந்தைக்கு 4 மணி நேரமாக சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முன்வராததால் அரசு மருத்துவமனை எதிரே உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடி பகுதியைச் சேர்ந்த ரத்தினகுமார் கிருஷ்ணவேணி தம்பதியின் 9 மாத கைக்குழந்தைக்கு வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து, குழந்தையின் பெற்றோர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
ஆனால் அங்கே நான்கு மணிநேரம் ஆகியும் மருத்துவர்கள் யாரும் இல்லாததால் செவிலியர்கள் ஒரு துண்டு சீட்டில் மருந்தை எழுதிக் கொடுத்து வெளி மருந்தகத்தில் வாங்கி வருமாறு கூறியுள்ளார்.
அங்கே யாரும் முறையான பதில் அளிக்காததால் ஆத்திரமடைந்த ரத்தினகுமார் மற்றும் அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)