ADVERTISEMENT
மூன்று அடி உயரத்துல நடிகர் ரஜினிகாந்திற்கு சிலையா..??
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு இராணுவ வீரர் கோவில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக் தனது வீட்டின் ஒரு அறையை நடிகர் ரஜினிகாந்தின் பூஜை அறையாக மாற்றியதுடன், அவர் நடித்த அபூர்வராகங்கள் முதல் ஜெயிலர் படம் வரையிலான அத்தளை புகைப்படங்களையும் வைத்துள்ளார்.
இதனைதொடர்ந்து, நாள் தோறும் ரஜினிக்கு தீபாராதனை, அபிஷேகம் செய்து வந்துள்ளார். தற்போது ரஜினிகாந்திற்கு மூன்று அடி உயரம் 250 கிலோ எடை கொண்ட கருங்கல்லினால் ஆன சிலையை வைத்துள்ளார்.
அந்தசிலைக்கு வேத விற்பன்னர்களால் யாகம் வளர்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தியுள்ள இந்த சம்பவம் நெசிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)