ADVERTISEMENT
தென்காசியில் தொடர் பனிபொழிவால் பூக்களின் விலை உயர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சி…
தென்காசியில் தொடர் பனிபொழிவால் பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார பகுதியில் கேரளா உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு பூக்களை ஏற்றுமதி செய்யப்படுவதால் பூக்களின் விற்பனை எப்போதும் அதிகரித்து காணப்படும்.
இந்த நிலையில் தை மாதத்தின் கடைசி சுப முகூர்த்தம் என்பதால் தென்காசி சங்கரன்கோவில் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது.
மேலும் பனிபொழிவால் மல்லிகை பூவின் வரத்து குறைந்து ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், தற்போது 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், அனைத்து பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் வியாபாரிகளும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)