மத்திய பிரதேச மாநிலத்தில் கோட் என்ற கிராமத்தில் பிந்து சர்மா என்ற நபர் தொடர்ந்து சிறுநீர் கழித்து வந்ததால் விகாஷ் சிங் என்பவர் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் கோவமடைந்த அந்த நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் நாயகோன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட் கிராமத்தில் பிந்து ஷர்மா என்ற நபர் அப்பகுதியில் உள்ள விகாஷ் சிங் என்பவரது வீட்டின் முன்பு அடிக்கடி சிறுநீர் கழித்து வந்துள்ளார். தொடர்ந்து இவ்வாறு செய்து வருவதால் பொறுமையை இழந்த அந்த இடத்தின் உரிமையாளர் விகாஷ் சிங் என்பவர் அந்த நபர் கண்டித்து போலீசில் புகாரளித்துள்ளார். இந்த சம்பவத்தால் கடும் கோவமான பிந்து சர்மா மது அருந்திவிட்டு அவரது நண்பருடன் விகாஷ் சிங் வீட்டிற்கு சென்று அவரது வீட்டில் உள்ளவர்களை தாக்கினர்.
இரு தரப்பிற்குமிடையே மோதல் வெடிக்க பிந்து சர்மா ஒளித்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரிக தாக்குதல் நடத்தினார். இதனால விகாஷ் சிங்உட்பட அவரது வீட்டிலிருந்த 3 பேருக்கு படுகாயம் அடைந்தது. மேலும் இந்த கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டால் அந்த வீட்டிலிருந்த 1 வயது சிறுவன் உயிரிழந்தார். இந்த சம்பவமறிந்து வந்த காவல் துறையினர் பிந்து சர்மா மற்றும் அவரது கூட்டாளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post