உக்ரைன் மக்களுடன் அமேசான் நிற்கிறது, தொடர்ந்து உதவி செய்யும் என அமேசான் சி.இ.ஓ ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து 8வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் கார்கிவ் நகரில் ரஷியா ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் உயிரை காத்துக்கொள்வதற்காக உக்ரைன் மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை தற்போது 8.74 லட்சமாக இருப்பதாகவும், இது விரைவில் 10 லட்சத்தை எட்டும் என்றும் ஐ.நா. அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், உலக நாடுகள் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ அமைப்பை சேர்ந்த பல நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள், நிதி உதவி வழங்கி ஆதரவு அளித்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் மக்களுடன் அமேசான் நிற்கிறது, தொடர்ந்து உதவி செய்யும் என அமேசான் சி.இ.ஓ ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “உக்ரைன் நிலைமை மோசமாகி வருவது கவலை அளிக்கிறது. உக்ரைன் மக்களுடன் அமேசான் நிற்கிறது. தொடர்ந்து உதவி செய்யும்.
அமேசான் மற்றும் எங்கள் ஊழியர்களிடமிருந்து பண நன்கொடைகள், தேவைப்படுபவர்களுக்கு பொருட்களைப் பெறுவதற்கான உபகரணங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு தேவையான இணைய பாதுகாப்பு உதவி ஆகியவற்றின் மூலம் தரையில் உள்ள மனிதாபிமான அரசு சாரா நிவாரண அமைப்புகளை நாங்கள் ஆதரிக்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.