அழகான சருமத்திற்கு தேவையான அசத்தலான டிப்ஸ்..!
கடந்த சில நாட்களாக சில அழகு குறிப்புகள் பற்றி பார்த்துக்கொண்டு வருகிறோம்.., அதில் இன்றைய அழகு குறிப்புகள்.
* பாலாடையை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகம் அழகாக இருக்கும்.
* காய்ச்சாத பச்சை பாலை ஒரு காட்டன் துணி அல்லது பஞ்சில் தொட்டு முகத்தில் பூசி 30 நிமிடம் கழித்து கழுவினால் முகம் பொலிவுடன் இருக்கும்.
* கடலை மாவுடன் சிறிதளவு எலும்பிச்சை சாறு சேர்த்து கலந்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவினால், வெள்ளையான சரும அழகு கிடைக்கும்.
* தக்காளி சாறு அல்லது தக்காளியை முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து முகம் கழுவினால், பொலிவான சருமம் கிடைக்கும்.
* வெள்ளரி சாறை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து முகம் கழுவினால் முகம் நாள் முழுவதும் புத்துணர்வுடன் இருக்கும்.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ. லோகேஸ்வரி