பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக – பாஜக தலைவர் அண்ணாமலை இடையே அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்ட வண்ணம் உள்ளது. அந்த வகையில், ஜெயலலிதா மற்றும் பேரறிஞர் அண்ணாவை தரக்குறைவாக பேசி சர்ச்சையில் சிக்கினார். இதற்கு அதிமுகவின்ர் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
அண்ணாமலை தன்னை முன்னிலை படுத்திக்கொள்ள அந்தர் பல்டி அடிக்கிறார். அம்மா பற்றி பேசி மன்னிப்பு கேட்டுவிட்டு அண்ணா வரலாற்றை பற்றி பேசுகிறார். அறிஞர் அண்ணாவை சிறுமை படுத்திய கருத்துக்கு கண்டனம் தெரிவித்தோம். அடுத்து பெரியாரை இழிவு படுத்துகிறார்.
பெரியார் அடிவாங்குவதை சொல்வேன் என்கிறார். கூட்டணி தர்மத்தை மீறி அண்ணாமலை பேசுகிறார். சிட்டுக்குருவிக்கு பட்டம் கட்டினால் திமிர் பிடித்து ஆடும். அண்ணாமலைக்கு கொடுத்த பதவி தகுதிக்கு மீறிய பதவி. பாஜக தலைவருக்கு லாயக்கு இல்லாதவர்.
அதிமுக சிங்க கூட்டத்தை பார்த்து சிறுநரி போல் அண்ணாமலை ஊலையிடுகிறார்
தனித்து நின்றால் நோட்டாவுக்கு கீழே ஓட்டு வாங்குவாரா. பெரியாரைப் பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது. கூட்டணி கட்சியை விமர்சனம் செய்யும் அண்ணமலையை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
அண்ணாமலையை தாருமாறாக விமர்சனம் செய்வோம். சிருமை புத்தியை பற்றி சமூக வலைதளத்தில் பதிவிடுவோம். அண்ணாமலை செயலால் தேர்தலில் எப்படி கூட்டணி கட்சியினர் வேலை செய்வார்கள். அதிமுகவுடன் கூட்டணியை அண்ணாமலை விரும்பவல்லை.பாஜக தொண்டர்கள் விரும்புகிறர்கள்.
பாஜக கலூன்ற முடியாத நிலை இருந்தது. அதிமுகவை வைத்து தான் அடையாளம் கண்டார்கள். அதிமுக இனி பாஐகவுடன் கூட்டணி் இல்லை. அடுத்த முடிவு தேர்தல் வரும்போது தான் முடிவு செய்வோம். அண்ணாமலை தலைவர்களை விமர்சனம் செய்தால் கடுமையான விளைவுகளை சந்தக்க நேரிடும் என தெரிவித்தார்.
Discussion about this post