திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக்கி தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 19 ஆம் தேதி சென்னை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டு போட முயன்றதாக, திமுக பிரமுகர் நரேஷ் என்பவர் மீது அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் அதிமுகவினர் தாக்குதல் நடத்தினர். நரேஷின் சட்டையை கழற்றி, அரைநிர்வாணமாக்கி தெருவில் இழுத்துச்சென்று தாக்கியதாக புகார் எழுந்தது.
இது குறித்து புகாரில் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஜெயக்குமார் கைது செய்து புழல் சிறையிலடைக்கப்பட்டார். இதற்கிடையில், ஜாமீன் கோரி பல முறை அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்த ஜாமீன் மனு இன்று(மார்ச்.03) விசாரணைக்கு வந்தது. அப்போது இதனை விசாரித்த சென்னை உய்ரநீதிமன்ற நீதிபதிகள், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
அதில், திருச்சியில் தங்கியிருந்து கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் 2 வாரங்கள் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.