டாஸ்மாக் கடைகள் திறப்பை மக்கள் நினைத்தால் தடுக்கலாம் என தமிழ்நாடு அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது.
டாஸ்மாக் மதுக்கடைகளுக்கான அனுமதி அளிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கி தமிழக அரசு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது.
அதன்படி, டாஸ்மாக் கடைகளை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாகப் பரிசீலிக்க வேண்டும். மக்கள் தெரிவிக்கக் கூடிய ஆட்சேபங்களைப் பரிசீலித்து தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்காமல் மதுக் கடைகளுக்கு அனுமதி அளிக்க கூடாது.
மேலும், மாவட்ட ஆட்சியர்களின் முடிவை எதிர்த்து 30 நாட்களுக்குள் மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையருக்கு மேல்முறையீடு செய்யவும் திருத்த விதிகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.