நடிகர் விஷால், தமிழ் சினிமாவில் ஒரு சில ஹிட் படங்களை கொடுத்துள்ளார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மயங்கி விழுந்தது அனைவருக்குமே பதற்றத்தை ஏற்படுத்தியது, இப்போது அவர் நலமாக உள்ளார். 38 வயதான நிலையில், திருமணம் முடியாமல் சிங்கிளாகவே வலம் வருகிறார்.ந
டிகர் சங்க கட்டிடத்தின் பணி முடிந்த பிறகு தான் திருமணம் என்று கூறி வருகிறார். தற்போது, நடிகர் சங்க கட்டடத்தின் கட்டுமான பணியும் நல்ல முறையில் நடந்து வருகிறது. இன்னும் இரு மாதங்களில் பணி முடிந்து விடும். ஆகஸ்ட் 15ம் தேதி கட்டத்தை திறக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் சங்க கட்டடம் திறக்கப்பட்ட பிறகு, ஆகஸ்ட் 29ம் தேதி தன்னுடைய திருமண தேதியை அறிவிக்கவுள்ளார் நடிகர் விஷால். தனது பிறந்த நாளில் தனது திருமண நாளை அறிவிப்பேன் என்றும் தான் ஒருவரை காதலித்து வருவதாகவும் விஷால் கூறியுள்ளார். கட்டடம் திறந்த அடுத்த முகூர்த்தத்தில் திருமணம்தான் என்றும் விஷால் தெரிவித்துள்ளார்.