பீகாரில் 75 சதவித இட ஒதுக்கீடு சட்டத்திற்கு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் ஒப்புதல்
பீகாரில் 75 சதவித இட ஒதுக்கீடு சட்டத்திற்கு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடரில், சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வின் முழு விவரங்களை வெளியிட்டுப் பேசிய முதல்வர் நிதீஷ்குமார், இடஒதுக்கீட்டு வரம்பை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும், தாழ்த்தப்பட்டோருக்கு 20 சதவிதம், பழங்குடியினருக்கு 2 சதவிதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் , பிற்படுத்தப்பட்டோருக்கு 43 சதவிதமாக உயர்த்த பரிந்துரை செய்தார்.
பீகார் மாநிலத்தில் மொத்த இடஒதுக்கீட்டு அளவை 65 சதவிதமாக உயர்த்த சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பீகாரில் 75 சதவிதம் இட ஒதுக்கீடு சட்டத்திற்கு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.
புதிய ஒதுக்கீட்டின்படி அரசுப்பணி, கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 65 சதவிதமும், பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு 10 சதவிதமும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.