வைரஸ் காய்ச்சலை தடுக்க நடவடிக்கை-திருப்பூர்
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பரவும் வைரஸ் காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு கட்டிடங்களை திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், மழைக்காலங்களில் பரவக்கூடிய வைரஸ் காய்ச்சல் குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என கேட்டுகொண்டார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)