நிதிஷ்குமார் அரசு மீது பீகார் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு…
பீகார் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் நிதிஷ்குமார் பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றார்.
பீகார் மாநிலத்தில் கடந்த 2020ஆண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக- நிதிஷ்குமாரின் ஜேடியூ கட்சி வென்று ஆட்சியைக் கைப்பற்றியது.
முதல்வராக இருந்த நிதிஷ்குமார் திடீரென பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டார்.
இதனையடுத்து நிதிஷ்குமாரின் ஜேடியூ(jdu) -காங்கிரஸ்- ஆர்ஜேடி(rjd)-இடதுசாரிகள் இணைந்து புதிய கூட்டணி ஆட்சி அமைந்தது.
இந்த கூட்டணியில் இருந்தும் அண்மையில் நிதிஷ்குமார் விலகி மீண்டும் பாஜக அணியில் இணைந்தார்.
இதனையடுத்து கடந்த 4 ஆண்டுகளில் 2 முறை பதவியை ராஜினாமா செய்துவிட்டு 3-வது முறையாக முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்றுள்ளார் .
இதனைத் தொடர்ந்து நிதிஷ்குமார் அரசு மீது பீகார் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.
243 எம்.எல்.ஏக்களை கொண்ட சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 128 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தனக்கு உள்ளதாக நிதிஷ் தெரிவித்திருந்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)