பேசும் மீனும்; பேராசை காரியும் – குழந்தைகள் கதை-1
ஒரு குளத்தின் பக்கத்தில் அருமையான குக்கிராமம் இருந்தது. அங்கு இருக்கும் கிராம மக்கள் அனைவரும், அந்த குளத்தில் வந்து தான் மீன் பிடிப்பார்கள். அப்படி ஒரு மீனவர் தினமும் மீன் பிடித்து சந்தையில் விற்பனை செய்துக் கொண்டிருந்தார்.
ஒரு நாள் அவரின் வலையில் பேசும் மீன் சிக்கியது, வலையில் சிக்கியதும், அந்த மீன் என்னை மீண்டும் குளத்தில் விட்டுவிட்டால் நீங்கள் கேட்ட வரங்களை நான் தருகிறேன் என்று.., அந்த மீன் சொல்லியது.
அந்த மீனவரும், நான் என் மனைவியிடம் கேட்டுவிட்டு வருகிறேன் என்று சொல்லி.., வீட்டுக்கு செல்கிறார்.
மீனவர் : புஷ்பா.., புஷ்பா.., இன்று என் வலையில் ஒரு பேசும் மீன் சிக்கியது, அதை நான் விட்டுவிட்டால் நீங்கள் கேட்கும் வரத்தை அது கொடுக்கிறேன் என சொல்லியது. உனக்கு என்ன வேண்டும் என கேள்..
புஷ்பா : எனக்கு நிறைய தங்க நகை மற்றும் ஒரு பெரிய வீடு வேண்டும். இதை கேட்டு வாருங்கள் என புஷ்பா சொல்கிறாள்.
மீனவரும் குளத்திற்கு சென்று மீனை அழைத்து வரம் கேட்கிறார். மீனும் ஒரு மந்திரத்தி சொல்லிவிட்டு செல்கிறது. வீட்டிற்கு வந்து பார்த்தால்.., அந்த பழைய வீடு பெரிய பங்களவாக மாறியது..,
ஆனால் மீனவரின் மனைவிக்கு ஆசை அடங்கவில்லை.., மீனவரை அழைத்து எனக்கு மண் மாளிகை வேண்டும், இந்த ஊரில் நான் மட்டும் ராணியாக வேண்டும், என்னிடம் எல்லோரும் அடிமையாக இருக்க வேண்டும் என வரம் கேட்டு வாருங்கள் என புஷ்பா சொல்கிறாள்.
மீனவரும் மீண்டும் குளத்திற்கு சென்று மீனிடம் வரம் கேட்கிறார், அதற்கு மீனும் மீண்டும் ஒரு மந்திரத்தை சொல்லிவிட்டு, இப்போ சென்று பாருங்கள் என சொல்லிவிட்டு அங்கு இருந்து சென்றது.
திரும்பி வீடு சென்று பார்த்தால்.. வீடு மண்ணாகவும், மனைவி ஒரு துடைப்பம், கிழிந்த துணி என இருந்தால்.., அதிர்ச்சியான மீனவர். மீண்டும் மீனிடம் சென்று ஏன் இப்படி ஆச்சு..? என கேட்க அதற்கு,
அந்த மீன். நீங்கள் தானே “மண்” மாளிகை வேண்டும் என கேட்டீங்க. அதான் மண்ணுலையே வீடு கொடுத்தேன்.., ஊர் மக்கள் உங்களுக்கு பணிவிடை செய்வது கஷ்டம் ஆனா ஊருக்காக நீங்கள் பணிவிடை செய்வது மிக சுலபம் என சொல்லிவிட்டு மீன் அங்கு இருந்து மறைந்து விட்டது.
“நமக்கு ஒரு வரம் கிடைக்கிறது என்றால்.., அது மற்றவரை துண் புறுத்தாத வகையில் இருக்க வேண்டும்.., பேராசை பட்டாளோ அல்லது அடுத்தவரை வீழ்த்த வேண்டும் என நினைத்தாளோ” இது தான் நடக்கும்.
இந்த பேசும் மீன், உங்களுக்கு கிடைத்து இருந்தாள்.., நீங்கள் என்ன வரம் கேட்டு இருப்பீர்கள் என கமெண்ட் பண்ணுங்க.
-வெ.லோகேஸ்வரி.