மகளை வைத்து பாலியல் தொழில் செய்த போலீஸ் அதிகாரி..!! 1000 ஆபாச வீடியோக்கள்..!! 100 சிறுமிகள்..!!
சென்னையில் ஒரு சில இடங்களில் பள்ளி மாணவிகளை வைத்து பாலியல் தொழில் நடத்துவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவின் விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் வீரகுமாரசாமி ( வயது 70 ) கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல பகீர் தகவலை வெளியிட்டார். அதாவது அவரது தோழி ருக்குமணி பள்ளி மாணவியை அறிமுகப்படுத்தி வைத்ததாகவும்.., அவருடன் தனிமையில் இருந்தால் பணம் தருவதாகவும் கூறியுள்ளார். இதானல் வீரகுமாரசாமி பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.
பிறகு ஜோதியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.., அதாவது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உயரதிகாரி ஒருவர், பாலியல் தொழிலில் ஈடுபடுவருக்கு உதவி செய்து வந்துள்ளார்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு துறையில் உயர் அதிகாரியாக இருக்கும் நடராஜன், அவரது மகள் ரம்யா தனியார் பள்ளியில் படித்து வருகிறார்., அந்த பள்ளியில் உடன் படிக்கும் மாணவர்களிடம் நட்பாக பழகி.., பின் மாணவிகளின் குடும்ப சூழ்நிலையை தெரிந்துகொண்டு.
பணத்தேவை உள்ள குடும்ப பெண்களை மட்டும் பார்த்து.., இதில் ஈடுபட வைத்துள்ளார். மேலும் அவர்களுக்கு பணத்தாசை காண்பித்து.., சொல்லும் போதெல்லாம் வந்தால் இன்னும் நிறைய பணம் கிடைக்கும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் அதனை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு வெளியே சொன்னால் அதை இணையதளத்தில் விட்டுவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். பள்ளி மாணவிகளை வைத்து பாலியல் தொழில் ஈடுபட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இதில் கரித்திர பதிவேடு குற்றவாளியான கருக்கா வினோத்துக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. கடந்த 2023ம் ஆண்டு சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த கருக்கா வினோத் ஆளுநர் மாளிகை முன்பு இரண்டு பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டடிருந்தார். அந்த வழக்கில் வினோத்தை கைது செய்து தேசிய புலனாய்வு முகமை விசாரணையை தொடங்கியது.
கடந்த 2022 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய வழக்கில் கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
வினோத்தை ஜாமினில் எடுத்தது யார் என்பது குறித்து பெரும் பேசுபொருள் ஆனது. அதனை தீவிரமாக விசாரித்த என்.ஐ.ஏ தற்போது பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பெண் தான், கருக்கா வினோத் ஜாமீனில் எடுத்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த ஜோதி என்ற பெண்ணின் வீட்டிற்கு சமீபத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. செல்போனை ஆய்வு செய்த போது, அதில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுமிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதும்., ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த பாலியல் தொழிலால் உள்ளூரில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க கருக்கா வினோத் இவர்களுக்கு உதவியதும்., இந்த விசாரணையில் தெரியவந்தது. அதனை தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அளித்த தகவலின் பெயரில் விபச்சார தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இவர்கள் யார் யாருக்கு சிறுமிகளை அனுப்பி வைத்திருக்கிறார்கள்.., இதில் இன்னும் யார் யார் எல்லாம் சம்மந்தபட்டுள்ளனர்.., எத்தனை சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று விசாரணை தீவிர படுத்தப்பட்டுள்ளது..
தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசிய போது.., அவர்கள் கூறியதாவது. ரம்யா என்ற பெண் தன் மகளின் பள்ளித் தோழிகளிடம் நெருங்கிப் பழகி, நடனம், அழகுக் கலை கற்றுத் தருவதாக ஆசை காட்டி வெளியே அழைத்து சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்துள்ளார்.
குறிப்பாக, ஐதராபாத், கோவை போன்ற நகரங்களுக்கு சிறுமிகளை அழைத்து சென்று கட்டாயப்படுத்தி பாலியல் தொழில் ஈடுபடுத்த வைத்து வீடியோவாக எடுத்து மிரட்டி அடிக்கடி பாலியல் சீண்டலில் ஈடுபட வைத்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள 7 பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் பின்னனியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள்.., அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
– லோகேஸ்வரி.வெ