மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் இருந்து புறப்பட்டு சென்ற விமானப்படையை சேர்ந்த இரண்டு ஜெட் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
சுகோய் 30 ரக விமானம் மற்றும் மிராஜ் 2000 ரக போர் விமானம் என்ற இரண்டும் மோதி கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் விமானி ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காயமடைந்த இரு விமானிகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும், இந்த விமான விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் மொரேனாவில் விபத்துக்குள்ளான போர் விமானங்களின் சிதைவுகள் விபத்து நடந்த இடத்திலிருந்து 100 கிமீ தொலைவில் ராஜஸ்தானின் உள்ள பரத்பூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Discussion about this post