ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் நடைபெறும் பகவான் ஸ்ரீதேவநாராயணனின் அவதார விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.
அதில், கடந்த ஒன்பது ஆண்டுகளாக சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள புறக்கணிக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிக்க நாடு முயற்சி எடுத்து வருவதாகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற மந்திரத்துடன் செயல்படுவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மோடி, நாகரிகம், கலாச்சாரம், ஒற்றுமை, திறன்களின் வெளிப்பாடாக இந்தியா உள்ளதாகவும், சமூக அதிகாரம் என்பது இந்தியாவின் ஆயிரம் ஆண்டு கால வரலாற்று பயணத்தில் பெரியப்பங்கு வகித்துள்ளதாகவும் பேசினார்.
Discussion about this post