கல்யாணம் செய்யாமல் பின் வாங்கிய காதலன்..! பெண் செய்த அதிரடி..! வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்…!
பீகார் மாநிலம் சரன் மாவட்டத்தில் உள்ள மதுரா பகுதியில், மருத்துவராக பணியாற்றி வந்த பெண் ஒருவர், அப்பகுதி கவுன்சிலரை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் 2 வருடங்களாக, தீவிரமாக காதலித்து வந்த நிலையில், நேற்று பதிவு திருமணம் செய்துக் கொள்ள முடிவு எடுத்தனர்.
ஆனால், கடைசி நேரத்தில், அந்த நபர் பின்வாங்கினார். இதையடுத்து, ஆத்திரம் அடைந்த அந்த பெண் பிரகாஷை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்
அங்கு, அவரை கடுமையாக தாக்கிவிட்டு, பிறப்புறுப்பை வெட்டியுள்ளார். இந்த தாக்குதலில் பிரகாஷ் கதறியுள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
பிறகு காவல்துறையினருக்கு தகவலை தெரிவிக்கபட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பலத்த காயம் அடைந்த நபரை மீட்டு , பாட்னாவில் உள்ள ஸ்ரீஷ்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பின்னர் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட பெண் மருத்துவர் மீது தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நேற்று கைது செய்யப்பட்டார். திருமணத்திற்கு மறுத்ததால் பெண் மருத்துவர் செய்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-பவானி கார்த்திக்