வீரட்டானேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு
திருக்கோவிலூர் அருகேயுள்ள கீழையூர் கிராமத்தில் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகமும், மாலை 4:00 மணிக்கு வீரட்டானேஸ்வரனுக்கு மகா அபிஷேகமும் மாலை 5:30 மணியளவில் நந்திஸ்வரனுக்கு பால், தயிர், இளநீர் மற்றும் பஞ்சாமிர்தம் போன்றவற்றில் அபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது.
அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.., அதில் சில பக்தர்கள் சிவபுராணம் பாடி வலம் வந்துள்ளனர். இதனை தொடர்ந்து பல சிறப்பு பூஜைகளும்.., தீப ஆராதனையும் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும், பிரசாதம் வழங்கப்பட்டது. பிரதோஷம் அன்று விரதம் இருந்து வழிபட்டால் சிவன் அருள் கிடைக்குமாம்.
-வெ.லோகேஸ்வரி