மும்பையை சேர்ந்த பார்லி ஜி பிஸ்கட் உலகத்திலேயே அதிகளவில் விற்பனையாகும் பிஸ்கட். குஜராத் தொழிலதிபர் மோகன்லால் சவுகானால் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. காபியோ, டீயோ குடிக்கும் போது, பார்லி ஜி பிஸ்கட்டை சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்துவதே அவரின் நோக்கமாக இருந்தது. தனது நோக்கத்திலும் அவர் வெற்றி பெற்று விட்டார். இதனால், 5 ரூபாய்க்கும் பார்லி பிஸ்கட் விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது, பாலஸ்தீனத்தின் காசா நகரில் கடும் உணவு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், 5 ரூபாய் பார்லி பிஸ்கட் 2,400 ரூபாய்க்கு அங்கு விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து பாலஸ்தீன தந்தை ஒருவர் தன் எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், இன்று எனது மகள் ரவிப்புக்கு பிடித்தமான பார்லி ஜி பிஸ்கட் கிடைத்தது. இதன் விலை 1.5 யூரோவில் இருந்து 24 யூரோவா உயர்ந்து விட்டது. எனினும், எனது மகள் ஆசையுடன் சாப்பிடும் இந்த பிஸ்கட் பாக்கெட்டை வாங்கி அவருக்கு கொடுத்தேன் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டு காஸாவுக்கு உணவு ஏற்றி செல்லும் வாகனங்களை இஸ்ரேல் ராணுவம் மறித்து விடுகிறது. 2023ம் ஆண்டு முதல் அங்கு கடும் உணவு பற்றாக்குறை நிலவுகிறது. இங்கு ஒருது கிலோ சர்க்க 4914க்கும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் 4,177க்கும் ஒரு கிலோ தக்காளி 1965க்கும் ஒரு கிலோ வெங்காயம் 4, 423க்கும் ஒரு கப் காபி 1,800க்கும் விற்கப்படுகிறது.