சமூகப் பிரச்னைகளுக்கு நடிகர் மாதவன் அவ்வப்போது குரல் கொடுப்பது உண்டு. அந்த வகையில், சமீபத்தில் நடிகர் மாதவனைப் ‘பேரண்ட் Army என்ற செயலியை உருவாக்கியுள்ளா.ர
இந்தச் செயலி பெற்றோருக்கு அடங்காமல் தறி கெட்டு தாராள சுதந்திரங்களுடன் இயங்கும் குழந்தைகளின் சமூக ஊடகம் மற்றும் இணைய உலகின் ஈடுபாட்டையும் செயல்பாட்டையும் கண்காணிக்க உதவுகிறது. உடனிருந்து பெற்றோர்கள் கவனிக்க முடியாத சூழலில் இந்தச் செயலி கண்காணித்து அவர்களுக்கு உதவுகிறது. இதன் மூலம் குழந்தைகளைக் கண்காணிக்கவும் நல்வழிப்படுத்தவும் வாய்ப்பாக அமைகிறது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் மாதவன் பேசும்போது, ஒரு பெற்றோராக இன்று ஊடகங்கள் செய்யும் தாக்கத்தை உணர்ந்திருப்பீர்கள்.பெற்றோரை விட அவற்றின் மூலம் அதிகம் கற்றுக் கொள்கிறார்கள். இப்போதெல்லாம் பிஞ்சிலேயே பழுத்தது போல் குழந்தைகளின் பேச்சு உள்ளது.எப்போதும் திரை பார்த்துக் கொண்டிருப்பது, சமூக ஊடகங்களில் உலவுவது என்று இருக்கும் குழந்தைகளை எப்படிச் சமாளிப்பது என்பது பெற்றோர்களுக்குப் பெரிய சவாலாக இருக்கிறது.
என் மகனைத் தேடி நாலைந்து நண்பர்கள் வருவார்கள். அவர்கள் அங்கே என்ன செய்கிறார்கள் என்று என் மனைவியிடம் கேட்பேன். அவர்கள் எல்லோரும் மிகவும் பரபரப்பாக இருக்கிறார்கள் என்பார் அந்த ஐந்து பேரும் ஒரு தனி அறையில் இருந்தால் கூட அவர்கள் தனித்தனியான உலகத்தில் சஞ்சரிக்கிறார்கள். ரீல்ஸ் பார்ப்பது, கேம் விளையாடுவது என்று இருக்கிறார்கள் என்று வேதனை தெரிவித்திருந்தார்.
இப்படி , குழந்தைகள் நலனில் அக்கறையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நடிகர் மாதவன் தற்போது வேறு ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார். சமீபத்தில் , மாதவன் அக்ஷய்குமார் நடிப்பில் கேசரி சாப்டர் 2 படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஜாலியன்வாலாபாக் படத்தில் நடந்த விஷயங்களை திரித்து எடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து நடிகர் மாதவன் பதில் அளிக்கையில்,
இப்போது, நான் சொல்லப்போகும் பதில் சர்சைக்குரியது. ஆனால், இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. எனது பள்ளி காலத்தில் வரலாற்று புத்தகத்தில் முகாலாயர்கள் பற்றி 8 பாடங்கள் இருக்கும். பிரிட்டிஷாரை பற்றி 4 பாடங்கள் இருக்குமி 2,400 ஆண்டுகள் வரலாறு கொண்ட சோழ மன்னர்கள், பாண்டிய, சேர , பல்லவ மன்னர்கள் பற்றி ஒரே ஒரு பாடம்தான் இருக்கும். முகலாயர்களும் , பிரிட்டிஷாரும் 800 ஆண்டுகள்தான் இந்தியாவை ஆண்டனர். சோழ மன்னர்கள் 2,400 ஆண்டு காலம் ஆண்டனர். மிகப் பெரிய கப்பற்படை வைத்திருந்தனர். ரோம் நகருடன் வர்த்தகம் புரிந்தனர். ஆங்கர்வாட் போன்ற இடங்களில் மிகப் பெரிய ஆலயத்தை நிர்மாணித்தனர். இந்து , புத்த, ஜைன மதங்கள் சீனாவுக்கு பரவியது. கொரிய மக்கள் தமிழ் பேசுகின்றனர். இதுவெல்லாம் ஏன் இந்த வரலாற்று பாடங்களில் இடம் பெறவில்லை?
இப்போது, 7ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்து அனைத்து முகலாய மன்னர்களின் பாடங்கள், டெல்லி சுல்தான் மன்னர்களின் பாடங்களை எடுத்து விட்டு, மகா கும்பமேளா, பேட்டி பச்சாவோ , மேன் இன் இந்தியாபோன்ற பாடங்களை சேர்க்க மத்திய கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகம் முடிவு செய்துள்ளது. ஆனால், உலகின் பழமையான மொழியான தமிழ் பற்றி ஒரு பாடம் இல்லை. யார் இந்த பாடத்திட்டங்களை வகுக்கிறார்கள்? அவர்களுக்கு கொஞ்சமாவது மண்டையில் அறிவு உள்ளதா? என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
கேசரி சாப்டர் படத்தில் முழு சுதந்திரந்துடன் காட்சிகளை அமைத்துள்ளோம். உடனே, அதற்காக எங்களை குற்றம் சாட்டாதீர்கள். வரலாற்றை மாற்றி சொன்னால் மட்டுமே திட்டுங்கள். நாங்கள் உண்மையை வெளியே கொண்டு வந்துள்ளோம். ஜாலியன்வாலாபாக்கில் நம்மை கிரிமினல்கள் என்று கருதிதானே ஜெனரல் டயரும் அவரின் சகாக்களும் சுட்டு வீழ்த்தினர். அதுவும், தன் துப்பாக்கியில் குண்டு தீர்ந்த பிறகே , டயர் சுடுவதை நிறுத்தியுள்ளான். அவ்வளவு எளிதாக ஒருவர் வரலாற்றை மாற்றி விட முடியாது? இந்த விஷயத்தில் நான் உறுதியாக இருக்கிறேன்.
இவ்வாறு மாதவன் தெரிவித்துள்ளார்.