Saturday, June 7, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

“தந்தை பெரியாரும் சமூக நீதியும்..” பெரியார்  செய்த தொண்டு..!!

திருச்சி அரசு மருத்துவமனையில் ரூ.1 லட்சம் நன்கொடை கொடுத்து குழந்தைகள் மருத்துவப் பிரிவைத் தொடங்க உதவினார்.

by logeshwari
September 17, 2024

“தந்தை பெரியாரும் சமூக நீதியும்..” பெரியார்  செய்த தொண்டு..!!

 

 

 

முதன் முதலாக  தந்தை  பெரியார்   தன்னுடைய  தொண்டை  திருச்சியில்  தொடங்கினார்.,   திருச்சி  மாநகரில்  தங்கி   22 ஆண்டுகளுக்கும்   மேல்  தொண்டாற்றினார்  என்பது குறிப்பிடத்தக்கது..   அவர் இறுதி பேரூரையை நிகழ்த்திய வாகனம் திருச்சி பெரியார் மாளிகையில்  தற்போதும் உள்ளது. பெரியாரின் அரசியலிலும் தொண்டிலும்  “திருச்சி” தவிர்க்க முடியாததாக உள்ளது. அதுகுறித்த ஒரு தொகுப்பை இங்கு பார்க்கலாம்.

பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி ‘சமூக நீதி’ நாளாக கொண்டாடப்படுகிறது. அறிவுலக மேதை, சமுதாய சிற்பி, பகுத்தறிவு பகலவன், தந்தை பெரியார் என்று போற்றப்படும் ஈ.வெ.ராமசாமி மொத்தம் 94 ஆண்டுகள் 3 மாதங்கள் 7 நாட்கள் வாழ்ந்தார். தன் வாழ்நாளில் 8,200 நாட்கள் சுற்றுப் பயணத்தில், மொத்தம் 8.20 லட்சம் மைல்கள் தூரம் பயணித்து, 10,700 பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று, 21,384 மணி நேரம் பொதுக் கூட்டங்களில் பேசியுள்ளார். ரஷ்யா உள்ளிட்ட 23 வெளிநாடுகளுக்கும் அவர் பயணித்துள்ளார்.

தமிழ்நாட்டின்  மையப் பகுதியான திருச்சியில் 1951 முதல் 22 ஆண்டுகளுக்கு மேல் பெரியார் தங்கி இயக்கப் பணியாற்றியுள்ளார். தனது இறுதிப்  பேரூரையை  நிகழ்த்திய அவரது வாகனம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இப்போதும் நின்று கொண்டிருக்கிறது. திருச்சியில் தங்கிய பெரியார் திருச்சிக்கு செய்த கொடைகளும் வரலாற்று நிகழ்வுகளும் ஏராளம். குறிப்பாக, திருச்சியில் அனைத்து தரப்பினரும் உயர்கல்வி பெற வேண்டும் நோக்கத்தோடு அரசு கலை அறிவியல் கல்லூரி அமைய 1965ம் ஆண்டு சுமார் 27 ஏக்கர் நிலத்தையும் ரூ.5.50 லட்சம் நிதியும் கொடுத்துள்ளார். முதலில் அரசு கலை அறிவியல் கல்லூரி என்று அறிவிக்கப்பட்டு பின்னர் பெரியார்  ஈ.வெ.ரா கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரியாக தொடர்கிறது.

குழந்தைகளின் மீது பேரன்பு கொண்ட பெரியார் 1959ம் ஆண்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தை திருச்சியில் தொடங்கினார். பொதுக் கூட்டங்களுக்கு சென்று விட்டு, இரவு எப்போது வீடு திரும்பினாலும் இந்த குழந்தைகளைக் கொஞ்சி, மகிழ அவர் தவறியதில்லை. திருச்சி கே.கே.நகரில் பெரியார் மணியம்மை நூற்றாண்டு கல்வி வளாகத்தில் செயல்பட்டு வரும் நாகம்மையார் குழந்தைகள் இல்லம் முதலில் 13 குழந்தைகளோடு தொடங்கப்பட்டது. தற்போது வரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கி, படித்து பல்வேறு நிலைகளுக்கு சென்றுள்ளனர்.

குழந்தைகளின் மீதுள்ள பிரியத்தால் திருச்சி அரசு மருத்துவமனையில் ரூ.1 லட்சம் நன்கொடை கொடுத்து குழந்தைகள் மருத்துவப் பிரிவைத் தொடங்க உதவினார். பெரியார் மணியம்மை குழந்தைகள் நலப்பிரிவு இப்போதும் உள்ளது. இதைத் தொடர்ந்து ஈரோடு அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு தொடங்கவும் ரூ.1 லட்சம் அளித்துள்ளார்.

“பெரியாருக்கு காணிக்கை”

சமூகத் தொண்டிற்கு மட்டுமல்ல அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளும் திருச்சியில் நிகழ்ந்துள்ளன. தி.கவில் இருந்து பிரிந்து 1949ம் ஆண்டு திமுகவைத் தொடங்கிய அண்ணா, 1967ம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று, முதலமைச்சரானார். முன்னதாக திருச்சி புத்தூர் மாளிகையில் இருந்த பெரியாரைச் சந்தித்து, இந்த ஆட்சி பெரியாருக்கு காணிக்கை என்று அண்ணா சொன்னார். இது அந்த காலகட்டத்தில் முரண்பட்டு இருந்த தி.க – திமுகவினரைச் நெகிழச் செய்த நிகழ்வாகவும் அமைந்தது.

பெரியாருக்கு வைக்கப்பட்ட முதல் சிலை

தொடர்ந்து 1967ம் செப்டம்பர் 17ம் தேதி பெரியாரின் 89வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் (தற்போதுள்ள மத்திய பேருந்து நிலையம் உள்ள பகுதியில்) பெரியாருக்கு சிலை திறக்கப்பட்டது. பெரியார் வாழ்ந்த போது பெரியாருக்கு வைக்கப்பட்ட முதல் சிலை இதுதான் என்கிறார்கள். முதலமைச்சராக இருந்த அண்ணா தலைமையில் நடைபெற்ற சிலை திறப்பு விழாவில், குன்றக்குடி அடிகளார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் காமராசர் விழாவில் பங்கேற்று பெரியார் சிலையை திறந்து வைத்தார்.

முன்னதாக பெரியாரையும் அண்ணாவையும் சாரட் வண்டியில் அமர வைத்து விழா மேடைக்கு அழைத்து வந்தனர் திராவிட இயக்க மூத்த தலைவர் அன்பில் தருமலிங்கம் உள்ளிட்டோர். இங்குள்ள சிலைதான் தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரியார் சிலைகளுக்கு மாதிரிமாக உள்ளது. தமிழ்நாடு முழுக்க சென்றாலும் திருச்சி மாவட்டத்தில் நிறைய பொதுக் கூட்டங்களில் பெரியார் பேசியுள்ளார்.

ஈரோட்டில் பிறந்தாலும் திருச்சி பெரியாரின் வாழ்க்கையிலும் திராவிட இயக்க வரலாற்றிலும் முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது.சிக்கனத்திற்கும் சேமிப்பிற்கும் பெயர் பெற்ற பெரியார், தனக்கென்றால் சிக்கனம். சமூகத்திற்கு என்றால் வள்ளல் என்பதை எடுத்துச் சொல்லும் நிகழ்வுகள் திருச்சியில் நடந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags: THANTHAI PERIYAR BIRTHDAYதந்தை பெரியார் அரசியல் வாழ்க்கைதந்தை பெரியார் பிறந்தநாள்தந்தை பெரியார் வரலாறு
ADVERTISEMENT

Related Posts

சினிமா

“காதல் நாயகன் மணிரத்னம் 69..” முதலமைச்சர் சொன்ன வார்த்தை..!!

சினிமா

“இவள் உலக அழகியே..” நடிகை த்ரிஷா விற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்…!

பாடல் ஆசரியர்

“உழைக்கும் இனமே உலக ஜெய்திடும் ஒரு நாள்…”  உழைப்பாளர்கள் தின  வாழ்த்து..!!

Next Post

ருசியான எஃக் கொத்து சப்பாத்தி ரெசிபி..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

5 ரூபாய் பார்லி பிஸ்கட் ரூ.2,400; எங்கே தெரியுமா?

டிரம்பை துரத்த புதிய கட்சி தொடங்கும் எலன் மஸ்க்; எக்ஸ் பக்கத்தில் 80 சதவிகித ஆதரவு!

விராட் கோலியுடன் அவருடைய சகோதரரி பேசமாட்டாரா…அனுஷ்கா காரணமா?

விராட் கோலியின் நெருங்கிய நண்பர்:கைது செய்யப்பட்ட ஆர்.சி.பி மார்க்கெட்டிங் தலைவர் யார்?

Trending News

5 ரூபாய் பார்லி பிஸ்கட் ரூ.2,400; எங்கே தெரியுமா?

டிரம்பை துரத்த புதிய கட்சி தொடங்கும் எலன் மஸ்க்; எக்ஸ் பக்கத்தில் 80 சதவிகித ஆதரவு!

விராட் கோலியுடன் அவருடைய சகோதரரி பேசமாட்டாரா…அனுஷ்கா காரணமா?

விராட் கோலியின் நெருங்கிய நண்பர்:கைது செய்யப்பட்ட ஆர்.சி.பி மார்க்கெட்டிங் தலைவர் யார்?

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.